குரு பெயர்ச்சி 2020: எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசனும் டிரான்ஸ்பரும் கிடைக்கும் தெரியுமா
குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு
சென்னை: குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஐப்பசி 30ஆம் தேதி, நவம்பர் 15ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ உள்ளது. நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். இந்த குரு பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, புரமோசன், சம்பள உயர்வு கிடைக்குமா டிரான்ஸ்பரும் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளதால் பலரது வேலை பறிபோய்விட்டது. நிறைய பேருக்கு சம்பள குறைப்பு செய்துள்ளதால் மன அழுத்தம் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன.
குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்களில் பிறந்தவர்களுக்கு வேலையும், புரமோசனும் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா - தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதி
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, குரு நான்காம் வீட்டிற்கு போகிறார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிக்கு வெற்றிகள் தேடி வரும். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. பெண்களுக்கு இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும். குல தெய்வத்தை நேரில் சென்று வணங்கி வருவது நல்லது. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். திருமணம் அமைப்பு கை கூடி வருவதால் காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான மகரம் ராசிக்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். பெரியோர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். அதே நேரத்தில் வார்த்தைகளில் கோபத்தை காட்டினால் அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் கவனமாக பேசவும். நரசிம்மர் வழிபாடு நன்மையை கொடுங்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு வருகிறது ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர சந்தானம் கொடுக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும். மகான்கள் தரிசனம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். சுபகாரிய தடைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகம் தொழில் வியாபாரத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கேட்கவும். கோபப்படாதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை காட்டவும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது அவசியம். திருக்கடையூர் சென்று அபிராமி அன்னையை தரிசனம் செய்து வாருங்கள். நரசிம்மர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கோபத்தை கட்டுப்படுத்தவும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான குரு பெயர்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. பழனி முருகனை மலைமீதேறி சென்று தரிசனம் செய்து வருவது நன்மையை தரும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கப் போகிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். வண்டி வாகனம் வாங்கலாம். வீடு கட்டலாம். பணம் விவகாரங்களில் கவனம் தேவை. ரகசியம் காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மேல் வெற்றி தேடி வரும். மகான்கள் தரிசனம் மன அமைதி தரும். திருச்செந்தூர் முருகனையும், குருவாயூரப்பனையும் சென்று தரிசனம் செய்து வர வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.