Guru Vakram: தனுசு ராசிக்கு அடுத்தடுத்து 4 மாதங்களில் நடக்கும் அதிசயம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு வண்டி, வாகனங்களில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. கை, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் கைகூடும் வாய்ப்புள்ளது. திருமண யோகம் கண்டிப்பாக உண்டு. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
தொழில் தொடங்கும் யோகம்
புதிய தொழில், வியாபாரம் தொடங்கும் பாக்கியம் உள்ளது. கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல இடத்தில் இருப்பது, டீலர்சிப், ஏஜென்சி தொடங்குவது போன்ற பாக்கியங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்து விற்கும் யோகம் உண்டாகும். வீட்டுக்கு விருந்தாளி வரும் யோகம் உண்டு. அந்த விருந்தாளியால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி ஏற்படும் யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
குரு வக்கிரமாக இருக்கும்போது வராத விருந்தாளி வீட்டுக்கு வந்தால் அற்புதமான யோகம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.. திருமண யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் நீங்கும். அனைத்து விஷயங்களுமே இனி உங்களுக்கு பாசிட்டிவாக நடக்கும்.
பணவரவு கொட்டும்
காசு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. 2 ஆம் இடத்தில் குரு வக்கிரமாகும்போது நேரடியாக லக்கினத்திற்கு பார்வை படும்போது காசு பணத்திற்கான வரவு அதிகரிக்கும். நாம் செய்வது சரி என்ற எண்ணம் தோன்றும். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். யார் உங்களைப் பார்த்தாலும் மரியாதை கொடுப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகள், தேவையில்லாத போன் கால்கள், நட்பு போன்றவற்றை விட்டு விலகுவது நல்லது.
வழிபாடு
மற்றபடி எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் இல்லை. நிறைய நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து இந்த 4 மாதங்களில் நடக்கும். மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். ராமன் வழிபாடு, சீதா ராமச்சந்திரன் வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
-
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. உங்கள் துணை ஆசைப்பட்டதை நிறைவேற்றும் காலம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications