கார்த்திகை அமாவாசை நாளில் 108 சுமங்கலி பூஜை - காலத்தை வெல்லும் கருங்காலி யாகம்
கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மஹாலக்ஷ்மி யாகம், சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் நடைபெற உள்ளது.
இராணிப்பேட்டை: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மஹாலக்ஷ்மி யாகம், சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் மந்திர,யந்திர,தந்திர, விஷசூர்ண,அபிசார தோஷங்கள் நீங்கி மங்களங்கள் ஏற்பட மகா காளியாகம் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 14.12.2020 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 108 சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது.

மாங்கல்ய பலம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமை வேண்டியும் நடைபெறும் சுமங்கலி பூஜையில் பங்கேற்க சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி தைல பிரசாதம் வழங்குகிறார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.
மஹாலக்ஷ்மி யாகம்,அமாவாசை முன்னிட்டு சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் மந்திர,யந்திர,தந்திர, விஷசூர்ண,அபிசார தோஷங்கள் நீங்கி மங்களங்கள் ஏற்பட மகா காளியாகம் நடைபெறுகிறது.
இந்த யாகத்தில் கருங்காலி,வெண்கடுகு,நாயுருவி தேவதாரு,வால்மிளகு,கடுகு வலம்புரி,இடம்புரி, மஞ்சள் கிழங்கு,சாம்பிராணி,குங்குலியம் போன்ற விஷேச திரவியங்கள் கொண்டு வருகிற 14.12.2020.திங்கள் கிழமை மாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை அமாவாசையில் உலக நன்மை வேண்டி வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து 64 கிலோ மஞ்சள் 64 கிலோ குங்குமம் கொண்டு பஞ்ச முகவராஹி தேவிக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதி செவ்வாய்கிழiம சுதர்சனர் ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தைலாபிஷேக பூர்த்தி விழா நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து உடல் பிணி, மன பிணி நீங்க 17 ஆம் ஆண்டு தைலகாப்பு திருமஞ்சனம் தன்வந்திரி மூலவருக்கு சென்ற மாதம் 29.11.2020 முதல் இன்று 15.12.2020 செவ்வாய்கிழமை நிறைவு பெறுகிறது. 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. 108 கலசங்களில் 108 மூலிகைகள் கலந்த தீர்த்தங்களால் மூலவர் தன்வந்த்ரி பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்கள் கொண்டு சஹஸ்ர நாம அர்ச்சனையும் ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஆலய தரிசனத்திற்கும் தொடர்பு கொள்ள 94433 30203.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications