Rasi Palan This Week: மகரம் ராசிக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்?
Magaram Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவதைத் தவிர்ப்பது நல்லது. உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். அரசியல், இசை, சினிமா துரையில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், கெளரவம் ஏற்படும்.
தொழில்
மீடியா துறையில் இருப்பவர்களுக்கு தனித்தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கும். செல்வாக்கு கூடும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அபிவிருத்தி ஏற்படும். ஏற்றம், பெயர், புகழ், நம்பிக்கை உண்டாகும். பெரிய அளவில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல் தீரும்.
சுக்கிரன் அருள்
தைரியமும், நம்பிக்கையும் ஏற்படும். உடற்பயிற்சியை தினந்தோறும் தவறாமல் செய்வது நல்லது. புதிய பொறுப்புகள், பதவிகளுக்கு வருவீர்கள். குடும்பத்தில் கோபம் இல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்வது ஏற்றத்தைக் கொடுக்கும். வாழ்க்கை தொடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் வலிமையாக அமர்ந்திருக்கிறது.
ஆரோக்கியம்
பெண் குழந்தைகளுக்கு யோகம் உண்டாகும். குடும்பத விஷயத்தில் சந்தோஷமும், சுவாரஸ்யமும் கூடும். புதிய விஷயங்களை எடுத்து செய்யும் யோகம் உண்டு. நல்ல வெற்றிகள் ஏற்படும். 3 ஆம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால் கழுத்து, கால் பாதம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 7 ஆம் இடத்தில் சந்திரன், கேது இருப்பது, அஷ்டமத்தில் சந்திரன், சனி, செவ்வாய் இருப்பது பிரச்சனைகளை ஏற்படும்.
வெற்றி மேல் வெற்றி
நிதானம், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. மற்றபடி எல்லா விஷயங்களும் உங்களுக்கு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தை இடத்திலும் வெற்றி அடையும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நரம்பு பிரச்சனை, தலைவலியில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு செய்வது, கோளார் பதிகத்தைக் கேட்பது ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் காரியசித்தி மாலை கேட்பது, படிப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications