Rasi Palan This Week: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் குட்நியூஸ்.. ரிலேசன்ஷிப்பில் கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு புத்தகம், ஆடிட்டிங், அக்கவுண்டிங், பணம், ஆசிரியப் பணி போன்றவற்றில் இனி எந்த தடைகளும் இருக்காது. நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். அரசாங்கப் பள்ளி, கல்லூரிகளில் வேலை, படிப்பு, பிடித்த துறை கிடைக்கும் யோகம் உண்டாகும். வங்கியில் வேலைக்கு சேரும் வாய்ப்புள்ளது. அமோகமான வாரமாக இந்த வாரம் இருக்கும்.
ரிலேசன்ஷிப்பில் கவனம்
வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரண நிவர்த்தி உண்டாகும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.
கவனம்
வயிறு சம்பந்தமான உணவுக் கட்டுப்பாட்டில் அதீத கவனமாக இருப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளிடம் மிகுந்த கோபத்தை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வது நன்மையை ஏற்படுத்தி தரும். அபிராமி அந்தாதியைப் படிப்பது ஆத்ம ரீதியான நிம்மதியும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
வழிபாடு
சந்தோஷமும், பொருளாதார ஏற்றத்திலும் 8 சதவீத முன்னேற்றம் ஏற்படும். வீரராகவப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பார்வதி தேவியை வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 பாடல்களை படிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications