மகா சிவராத்திரி : வியாழக்கிழமையில் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் என்னென்ன சிறப்புகள் தெரியுமா
மகா சிவராத்திரி மார்ச் 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வியாழக்கிழமையும் மகா சிவராத்திரியும் இணைந்த அற்புதமான நன்னாளில் சிவபெருமானை விரதமிருந்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: வியாழக்கிழமை குருவுக்கு உகந்த தினம். இந்த நாளில் மகாசிவராத்திரி விரதம் இருந்து ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்று ஆன்மீக குருமார்கள் கூறியுள்ளனர்.
அன்னை பார்வதிக்கு உகந்தது நவராத்திரி ஒன்பது நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. மாசி மாதம் மகா சிவராத்திரி பண்டிகை சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் என களைகட்டும்.

இந்த ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா வரும் 11ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பகிறது. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். நாளை வியாழக்கிழமை அதிகாலையில் திறக்கப்படும் கோவில் நடை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை அடைக்கப்படாது என பல ஆலயங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையில் சிவனை வழிபடுவது சிறப்பு. அதுவும் மகாசிவராத்திரி நாள் வியாழக்கிழமை வருவதால் ஞானகுருவாக போற்றப்படும் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவித யோகங்களும் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை விலகும். நோய் நொடிகள் நீங்கும்.
சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். சிவனை அலங்கரிக்க வில்வம், செவ்வரளி, மல்லி, முல்லை முதலான மலர்களை வாங்கிக் கொடுக்கலாம். மனதில் நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.
சிவ ஆலயத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். நமச்சிவாய மந்திரத்தை நாள்முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கலாம். விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்களுக்கு கர்மவினைகள் நீங்கும். எதுவுமே வாங்கித்தர வசதியில்லையே என்று ஏங்க வேண்டாம். வில்வம் வாங்கிக் கொடுங்கள் பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications