திரும்பி செல்லும் குரு பகவான்.. மொத்தமாக எல்லாம் மாறப்போகுது! ரிஷப ராசி வக்ர பெயர்ச்சி பலன்!
சென்னை: குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் ரிஷப ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
நற்பலன்கள்:
உறவுகள் மேம்படும்: இந்த காலத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். அன்புக்குரியவர்களுடன் ஆழமான இணக்கமான உறவு உண்டாக்கும். வேலையில் எதிர்பாராத பாராட்டு அல்லது அங்கீகாரம் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கிய மேம்பாடு: சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும்.
நிதி எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். கடன்கள் குறையும். அதிகம் பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும். அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம்.
கெடுபலன்கள்;
அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்: எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொறுப்புகளை புறக்கணித்தல் வேண்டாம். எந்த பணியை செய்தாலும் கவனமாக இருங்கள்.
ஏமாற்றம்: எதிர்பார்க்கப்படும் சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை வரலாம். கவனச்சிதறல் ஏற்படும். கவனமாக வாகனம் ஓட்டுங்கள். விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு கறிவிருந்து வைக்கவும்.












Click it and Unblock the Notifications