ஹேவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் ( தனுசு முதல் மீனம் வரை)

ஹேவிளம்பி வருடம் 12 ராசிகளுக்கும் புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ளலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹேவிளம்பி வருடத்தில் பன்னிரெண்டு இலக்கினம்/இராசி அன்பர்களுக்கும் நல்லவையே நடக்க இனிய ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017 அதிகாலை பங்குனி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 04 மணிக்கு மகர இலக்னம் துலா இராசி விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறது.

(ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் (மேஷம் முதல் கடகம் வரை)

(ஹேவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் ( சிம்மம் முதல் விருச்சிகம் வரை)

தனுசு முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தனுசு:

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் -1,2பாதங்கள்)

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

Hevilambi Tamil New year Rasi Palangal Dhanusu to Meenam

சூரியன்: வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும். அரசின்உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின்அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில்முதலீடு செய்யலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரரால்நன்மை உண்டு.

செவ்வாய்: சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப்பெருகும். தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும். எடுத்து வைக்கும்ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும்காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் கிடைக்கும். பெண்களுக்குஅடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம்ஏற்படலாம். பொருளாதார நிலை உயரும். புகழும் ஓங்கும்.

புதன்: நிம்மதியும் சுகமும் ஏற்படும். புத்திதெளிவுற்று, அறிவுத் திறன்கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும். ஓருஅரசனைப் போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகம் இருப்பர். அடுத்து வரும்மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.பேச்சாளர்களுக்கு வாக்கு வன்மையால் வருமானமும், புகழும் உயரும். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

சுக்கிரன்: குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். பதியஆடைகள், பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். சொற்பொழிவுத்திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும். மனைவிவயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள். பின்வரும் காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவிதேடிவரும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.

குரு - தனுசுக்கு அதிபதியான தேவகுரு, ஆவணி 27 இல் கர்மஸ்தானம் விட்டு, இலாப ஸ்தானத்தில் அமர்ந்து கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவியும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்லமுன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம்கிட்டும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும்.

சனி - ஜன்மச் சனியின் நுழைவு வாயிலாக அமையும் இராசியில்அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும், வெகு தூரப்பயணங்களையும்ஏற்படுத்துகிறார். வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமைஎன அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும். காளஹஸ்தி சென்றுசனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும். காசியாத்திரைசெல்லலாம்.

ராகு:ஆண்டின் தொடக்கத்தில் பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும் ஆண்டின் பிற்பகுதியில் பலவித கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும்.
கேது: ஆண்டின் முற்பகுதியில் இட மாற்றம் உண்டாகும் பிற்பகுதியில் பண வருமானம் அதிகரிக்கும்.

மகரம்:

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2பாதங்கள் )

கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.

சூரியன்: நல்ஆரோக்கியம், சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும். மேற்கொள்ளும் புதியதொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும். அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

செவ்வாய்: வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும். அரசுப்பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும்.பூமிலாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுகசாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர் உணர்ச்சி மிகுதல், பெண்களால்தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.

புதன்: வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப்பொருளாதார நிலை சீராக இருக்கும். மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம்,உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள். சிலருக்குஅவப்பெயர் உண்டாகலாம். பின் வரும் காலத்தில் கௌரவம் ஓங்கும். அழகியமனைவி அமைவாள். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

சுக்கிரன்: வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும்,மரியாதையும் கூடி ஏழைப் பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள். செல்வம்கொழிக்கும், தானியவகைகள் குவியும். அரசு ஆதரவு கிடைக்கும். அரசாங்கவிருதுகள் கிடைக்கும். பின்னர் வரும் காலத்தில் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க நேரும். வேண்டாத அலைச்சல்கள் ஏற்படும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும். உயர்ந்தவாழ்க்கைத் தரம் அமையும்.

குரு : ஆவணி 27 க்கு பத்தில் அமரும் குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும்திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும்பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்.வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.

சனி: விரயத்தில் அமரும் சனியால் பயன்ற்ற அலைச்சல். வெகுதூரப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சனியின் பார்வை 2, 6, 9 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குறைபாடுகள், வேண்டாத வெறுப்புகள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் வரும் காலம் ஆகும். இனி கலகலப்புக்குக்குறைவிருக்காது. சாமர்த்தியமும், சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால்வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு உள்ளம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திதமிருந்து பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும் பிற்பகுதியில் வியாபார நிலை சிறப்படையும்.
கேது: ஆண்டின் முற்பகுதியின் செல்வ நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

(அவிட்டம் 2,3 பாதங்கள் சஹயம்1,2,3,4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)

ஆயுள்காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

சூரியன்: காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால், அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்.வங்கிக் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். படிப்பில் அதிகஅக்கறை தேவை. வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது.தொழில் விருத்தி உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.

செவ்வாய் : வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால்பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வசதிகள் அனைத்தும்நிரம்பிய அழகிய வீடு அமையும். பின்னர் வரும் காலத்தில் எல்லாக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகள்அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டு, ஆனந்தம் பொங்கும்.

புதன்: மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் மெத்தனமாக இராமல்,கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம். குடும்பத்தில் சுபகாரியநிகழ்வுகளுக்கான நல்ல தருணங்கள் அமையும். கலைஞர்களின் கௌரவமும்,புகழும் கூடும். உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால் இடைஞ்சல்கள் ஏற்படும். பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள்வாக்குவன்மையால் வருமானம் பெருகும். அரசியல் வெற்றிகளால் ஏற்படும்மகிழ்ச்சி நிரந்தரமாய்
இருக்காது. புத்தி கூர்மை, பலம் மற்றும் திறமைஆகியவை அதிகரிக்கும்.

சுக்கிரன்: கடினமான காரியங்கள் என நினைத்த காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப் பெறுவீர்கள். சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள் மூலமாகக் கிடைத்தபணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மிடுக்காக நல்ல உடைகள்அணிந்து அனைவரையும் கவர்வீர்கள். உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும்வெற்றி ஆகியவை ஏற்படும்.

குரு : ஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும்சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். ஏமாற்றங்கள்,மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயானஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத
நிகழ்வுகளாகும்.

சனி - இலாப பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன்பார்வைகளை 1, 5, 10 ஆம் இடங்களின் மீது வீசுகிறார். இதன் காரணமாகசெல்வ நிலை சிக்கலின்றி சீராக உயரும். தொழிலில் புதிய விரிவாக்கத்திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும். புனித யாத்திரையாகத் திருநள்ளாறுசென்று சனிபகவானை சேவித்து வந்தால், பகலவனைக் கண்ட பனி போல்பறந்து துன்பங்கள் மறைந்துவிடும்.

ராகு: ஆண்டின் ஆரம்பத்தில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் உடல் உழைப்பு அதிகமாகும்.
கேது: ஆண்டின் ஆரம்பத்தில் மனதில் தெளிவு சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் உண்டாகும்.

மீனம்:

( பூரட்டாதி - 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4பாதங்கள்)

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.

சூரியன்: உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும். அரசு மூலமாக சிறந்த சேவைக்காகசிறப்பான கௌரவங்கள் வந்து சேரும். நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றி மேல் வெற்றிகள் குவியும், எடுக்கும் காரியங்கள் அனைத்தும்சிறப்பாகவே முடியும். புதிய பதவி, கௌரவம் மற்றும்அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைத் தருவார்.

செவ்வாய்: புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால், எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து, சுவைதரும் காலம் கண்ணுக்குத்தெரியும். சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்.
பொருளாதாரஉயர்வு ஏற்படும். பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். எல்லாத்துறைகளிலும் இலாபம் ஏற்படும். பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும்.தகராறுகள், வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.

புதன்: நீண்ட தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். புத்தாடை, புதுஆபரணங்கள் சேர்க்கை, ஏற்படும். நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அழகிய மக்கட்பேறு உருவாகும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம்செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும்பெருகும். சிலருக்குப் தகாத ஆசைகளும், கெட்ட சவகாசங்களும் ஏற்படும்.எனவே, எச்சரிக்கை தேவை.

சுக்கிரன்: புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும்.பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டு, அவர்களால்உங்களுக்குப் பெருமை சேரும். தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள்ஏற்படும். உங்கள் கடமை தவறாத உணர்வால், உயர் அதிகாரிகளின்நன்மதிப்பைப் பெறுவீர்கள். சுப காரியச் செலவுகள் கூடும். வீட்டில் மகிழ்ச்சியும்கூடும். அதன் பின்னர் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும்.புண்ணிய யாத்திரைகள் மன அமைதி தரும். புதிய இடமாற்றங்கள்பயனுள்ளதாக இருக்கும்.

குரு: ஆவணி 27 ஆம் நாள் குரு 8 ஆம் பாவத்திற்கு இடம்பெயர்கிறார். அதுவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்லவளர்ச்சி ஏற்படும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சிநிலைத்திருக்கும். அதன் பிறகு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள்கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சனி: கர்ம பாவத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வுஉண்டு. திருநள்ளாறு திருத்தலம் சென்றுமந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும். சிலர் பொது வாழ்வில் பிரபலமாகி, முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். மிகுந்தசெல்வங்கள் சேரும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும்.
கேது: ஆண்டின் முற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும் பிற்பகுதியில் தொழில் லாபம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+