திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - ஆடி அசைந்து வந்த ஐந்து தேர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் இரவு வரை ஐந்து தேர்கள் மாட வீதி அசைந்து வந்த அழகை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Recommended Video

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து முருகர் தேர் வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசித்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரியும் அண்ணாமலையார் அம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் வீதி உலா ஆகியவை திங்கட்கிழமை காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. விநாயகர் மற்றும் முருகன் தேர்கள் இரண்டும் நிலைக்கு வந்ததும், பெரிய தேர் என்று அழைக்கப்படும் சுவாமி தேரோட்டம் தொடங்கும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம்பிடித்து இழுத்து செல்வார்கள்.

பெரிய தேர் நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச்செல்வார்கள். இதற்குப் பின்னால், கடைசியாக சிறுவர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.

காலை முதல் நள்ளிரவு வரை பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சிவெகுவிமரிசையாக நடைபெறும். தேரோட்டத்தைக் காண மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மலை மீது ஏறுவதற்கு 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications