மும்பை சித்தி விநாயகர், ஷீரடி சாய்பாபா கோவில் திறப்பு - பக்தர்கள் கண் குளிர தரிசனம்
மகாராஷ்டிராவில் 8 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டன. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த கோவில்கள், சர்ச், மசூதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் கோயில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வழிபாடு தலங்களில் கண் குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.
Recommended Video
மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கெரோனா வரைஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்டன. 8 மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில் இன்று திறக்கப்பட்டன. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும மார்ச் இறுதியில் இருந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது மகராஷ்டிராவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனையடுத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
நாக்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோயில், ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலையிலேயே தெக்டி விநாயகர் கோயிலில் திரண்ட பக்தர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடித்து நின்று, பிள்ளையார் மற்றும் தல விருட்சத்தை தரிசனம் செய்தனர்.
அதுபோலவே ஷிர்டியில் உள்ள சாய்பாபா கோயில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத கோயில்கள் திறக்கப்படும் நேரம் குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். பக்தர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரசித்தி பெற்ற மகிம் தர்காவிலும் இன்று முதல் ஏராளமானோர் தனி மனித இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர். மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications