For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகா சிவராத்திரி 2018: மிதுன ராசிக்காரர்கள் சிவனுக்கு கறும்பு சாறு வாங்கிக் கொடுங்க!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மகா சிவராத்திரி 2018: எந்த ராசிக்காரர்கள் என்ன படைக்கலாம்?- வீடியோ

    சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.

    இன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷம்:

    வீரத்திற்கு அதிபதியான செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். நினைத்த காரியம் நடக்கும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் வெண்மையான தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.

    மிதுனம்:

    மிதுனம்:

    புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் சில லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கடகம்:

    கடகம்:

    சந்திரனை அதிபதியாக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சிம்மம்:

    சிம்மம்:

    சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கன்னி:

    கன்னி:

    புதனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    துலாம்:

    துலாம்:

    சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பசும் பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

    விருச்சிகம்:

    விருச்சிகம்:

    செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் இன்று சிவனை அபிஷேகம் செய்யலாம்

    தனுசு

    தனுசு

    குருபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்

    மகரம்:

    மகரம்:

    சனிபகவானுக்கு பிடித்தது எள். சனிபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்

    கும்பம்:

    கும்பம்:

    சனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவனுக்கு அபிஷகம் செய்ய வேண்டும்

    மீனம்:

    மீனம்:

    குருபகவானை அதிபதியாக கொண்ட மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ பாலால் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்

    English summary
    Maha Shivratri is celebrated in the honour of Lord Shiva, with devotees observing day-long fasts. This year, the festival observs on the evening on today. Temples across the country are decorated with lights and devotees get together in temples and chant 'Om Namah Shivaya' all night long.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X