செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. ரிஷப ராசிக்காரர்கள் தொட்டது பொன்னாகும்!..நினைத்தது நிறைவேறும்!!
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் தொட்டதெல்லாம் பொன்னாகும். செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சென்னையில் பலியான கிக் பாக்சர்.. தலையில் பலத்த காயம்.. 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சோகம்!
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களைத் தருவார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் வேண்டாம். முயற்சி செய்யும் சிலருக்கு புது வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் எந்த மாற்றமும் இல்லை.
திருமணம், குழந்தை பாக்கியம்
புதன் உச்சம் பெற்று வக்ரமடைந்தாலும் கவலையில்லை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் பெறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கை கூடி வரும். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ள புதன் மீது குரு பார்வை படுவதால் புத்திரபாக்கியம் கைகூடி வரும். நல்ல செய்தி தேடி வரும் மாதமாகும்.
உடல் ஆரோக்கியம்
பெண்கள் வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு வாங்க முயற்சி செய்யலாம். பண்டிகை காலங்கள் வருவதால் வீடு பராமரிப்பு செய்யவும் ஏற்ற காலம். ராகு 12ஆம்இடம் கேது 6ஆம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். உற்சாகம் கூடும். தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கு ஏற்ற மாதம். பிடித்த கல்லூரியில் நினைத்ததை படிக்கலாம்.
மன நிம்மதி அதிகரிக்கும்
பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கணவனின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுபவிப்பீர்கள். உங்களை நீங்களே அழகுப்படுத்திக்கொள்ள அதிக பொருட்களை வாங்குவீர்கள். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.