ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்த நாள் பரிசு..பட்டு வஸ்திரம் கிளி சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
திருச்சி: நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், மனம் கவர்ந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசு அளிப்போம். அது போல சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்தநாள் பரிசாக பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பியுள்ளார். ஆண்டாளின் பட்டு வஸ்திரத்தை அணிந்து சித்திரை ரேவதி திருநாளில் திருத்தேரில் எழுந்தருளுவார் ஸ்ரீரங்கநாதர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அவதரித்த ஆண்டாளை தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்தவர் பெரியாழ்வார். தன்னை வணங்க வரும் பக்தர்களுக்கு ரங்கமன்னாருடன் எழுந்தருளி ஆசி தருகிறாள் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாளுக்கு ஆண்டு தோறும் பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படும்.

ஆடிப்பூரம் நாளில் திருத்தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும். பிறந்தநாளன்று திருத்தேரில் வலம் வரும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதர் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை ஸ்ரீரங்கத்தில் இருந்து பரிசாக கொடுத்தனுப்புவார். பதிலுக்கு ஆண்டாளும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்த ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்தநாள் பரிசளிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு ஸ்ரீரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினத்தன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு நாளைய தினம் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டாளும், ரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அதை தொடர்ந்து ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அனுவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரங்கள், மாலை, கிளி ஆகியவற்றை ரமேஷ் பட்டர் மாசி வீதியில் வழியாக மேள தாளங்கள் முழங்க கொண்டு வந்தார். இதையடுத்து அதனை தக்கார் ரவிச்சந்திரன். நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் ஸ்ரீரங்கம் கொண்டு சென்றனர்.
சித்திரை திருவிழா ஸ்ரீரங்கத்தில் விருப்பன் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விஜயநகர் பேரரசின் விருப்பன்ன உடையார் தொடங்கி வைத்ததால் இதற்கு இவ்வாறு பெயர் வந்தது. விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும் 52 கிராமங்களும் தானமாக கொடுத்து தொடங்கி வைத்தார் என்று கோவிலில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

1323 ஆம் ஆண்டு முகலாயர்கள் படையெடுப்பின் போது 12000 வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்தையும் நம்பெருமாளையும் காக்க உயிர் துறந்தனராம். நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து 1323 ஆம் ஆண்டு வெளியேறி மீண்டும் 1371 ஆம் ஆண்டு மொத்தம் 48 ஆண்டுகள் விஜயநகர மன்னர்களின் பெரும் முயற்சியால் மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார்.
1371 ஆம் ஆண்டு நம் பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தாலும் வழக்கமான உற்சவங்களை தொடங்க முடியவில்லை. முகலாய படையெடுப்பினால் கோயிலும் இராமானுஜர் செய்து வைத்த முறைகளும்,கைங்கர்யபாரர்களும் முற்றிலுமாக சிதைந்து போனது. கோவிலை மீண்டும் முழுமையாக புனரமைத்து செயல்பட வைக்க 12 வருடங்கள் ஆனது.

1383 ஆம் ஆண்டு சித்திரையில் தான் 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் உற்சவமாக விருப்பன் திருநாள் தொடங்கப்பட்டது. விருப்பன்ன உடையார் ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரையும் அழைத்து தங்களால் ஆன தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஸ்ரீரங்கநாதருக்கு அளிக்க வேண்டி இந்த சித்திரை திருநாளை 1383 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கினார்.
அதனால் தான் இன்றைக்கும் சித்திரை தேருக்கு ஆயிரக்கணக்கான கிராமத்து மக்கள் கலந்து கொண்டு நெல், கால்நடைகள் ஆகியவற்றை கோயிலுக்கு சமர்பித்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருத்தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications