கொரோனா அதிகரிப்பு : தஞ்சை பெரியகோவில், நாமக்கல் நரசிம்மர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயமும் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகளும் மூடப்பட்டுள்ளன.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கொரனோ பரவல் காரணமாக இன்று அதிகாலை முதல் மூடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான நுழைவாயிலான மராட்டா நுழைவாயில் முன்பு இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி வழங்கவில்லை இந்நிலையில் கோவில் உள்ளே இருக்கும் சுவாமிகளுக்கு மட்டும் நாள்தோறும் நடக்கும் பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கம் போல கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர். அவகாசங்கள் கொடுத்து தஞ்சை பெரிய கோயிலை மத்திய தொல்லியல் துறை பூட்டி இருக்கலாம் எனவும் தற்போது நாங்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம், நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடன் 2020 மார்ச் மாதம் முதல் 2020 நவம்பர் வரைக்கும் பல கோவில்கள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், அருட்காட்சியங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications