Rasi Palan: சனியின் அருளால் தனுசு, மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான தனுசு, மகரம் ராசிக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பதட்டம் வேண்டாம். கண், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, முதுகு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமன், பெருமாள், நரசிம்மர், விநாயகரை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுமாடுகளுக்கு கோதுமை வெல்லம் தொடர்பான உணவுப் பொருள்களை கலந்து கொடுப்பது முன்னேற்றத்தை தரும்.
பெற்றோர், பெரியோர்களுக்கு அனுகூலம் ஏற்படும். துணை விஷயத்தில் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. லாபத்தின் அளவு அபரிமிதமாக இருக்கும். ஏற்றத்தின் அளவு பன்மடங்காக உயரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். ரத்தபந்த உறவுகளுக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. துணையின் சொல் பேச்சை கேட்டு நடப்பது வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சுப விரய பாக்கியம் உண்டாகும். லாட்டரி டிக்கெட்டுகள் போன்றவற்றில் திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு ஏற்படும். பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வங்கியில் இருந்து வந்த நீங்கள் மறந்து போன விஷயங்கள் உங்களுக்கு கைகொடுக்கும் காலகட்டம். யோக பலத்தை அதிகளவில் பெறும் நேரம்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த தடைகள் தவிடுபொடியாக்கும் நல்ல காலகட்டம். மூன்றாம் இடத்தில் சனி இருப்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா விதமான நன்மைகளும் தர உங்களுக்கு சனி பகவான் இருப்பதால் திட்டமிட்டு, சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது.
மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் உங்கள் குடும்பத்தை நினைத்து முன்னேறிக் கொள்வது நன்மை பயக்கும். இளம்வயது முதல் 60 வயதான மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் நிச்சயம் ஏற்படும். முதுகு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சிறு உடல் பாதிப்புகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு, காரியசித்தி மாலையை கேட்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தி தரும்.












Click it and Unblock the Notifications