2025 சனிப்பெயர்ச்சி எப்போது?.. ராஜயோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
Sanipeyarchi palangal: 2025 ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களில் வலிமையான கிரகம் என்பது சனி பகவான்தான். ஒரு கிரகம் ஒரு பாவத்தில், ஒரு வீட்டில், அல்லது ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக் கூடிய கிரகமாக சனி பகவான் உள்ளது. சந்திரன் இரண்டரை நாள், மாத கோள்கள் என்று சொல்லும் புதன், செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரு மாதம், இரண்டு மாதம் இருக்கும். ராகு கேது கிரகம் ஒன்றரை வருடமும், குரு பகவான் ஒரு வருடம் ஒரு ராசியில் இருப்பார்.

ஆனால், சனி பகவான் மட்டும்தான் ஒரு ராசியில் அதிக காலமாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 7, 8 வருடங்கள் முழுவதுமாக பாவ கிரகங்களின் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்து வந்த நிலையில், தற்போது குரு பகாவனின் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். மீனத்துக்கு போகக்கூடிய சனி பகவான் குழுமையாக, இனிமையாக மாறி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார்.
பொதுவாக சனி பகவான் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு இருக்கும். அசுப பலன்களை மட்டுமே தருபவர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், சனி பகாவன் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களை அள்ளித் தருபவராவர். நீதிக்காரகன், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் தராசில் வைத்தது போல அனைத்து விதமான பலன்களையும் சரிசமமாக தரக்கூடிய நீதிமானாக செயல்படக் கூடியவராவார்.
அந்த வகையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இதில், 6 ராசிக்காரர்கள் யோகமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அதன்படி, ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு 11 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் அற்புதமான ராஜ யோகங்களை ரிஷப ராசியினர் அனுபவிக்கப் போகின்றனர். 9க்கும் பத்துக்கும் அதிபதி. இயல்பிலேயே ராஜயோகாதிபதி 11 ஆம் இடத்தில் இருக்கும்போது அபரிமிதமான செல்வ பலன்களைக் கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை, திருமணம் என அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்து செல்வத்தையும், பொருளாதாரம், குடும்பம், மன அமைதி என அனைத்து விஷயங்களையும் தரப்போகிறார். 11 ஆம் இடத்தில் லாபஸ்தானத்தில் சனி பகவான் வருவதால் அடுத்த மூன்று வருடம் மிகச் சிறந்த பலன்களை அனுபவிப்பார்கள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 9 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். தற்போது பத்தாம் இடத்துக்கு வருகிறார். இதுவரை இழுபறியாக இருந்து வந்த பாக்கிய தடைகள் அனைத்தும் நீங்கும். தொழில், வேலையில் வேகமெடுக்கும். கடின உழைப்பால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம் - இந்த சனிப்பெயர்ச்சியின் நாயகர்களே கடக ராசிக்காரர்கள்தான். அந்த அளவுக்கு யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். கடந்த இரண்டரை வருடம் கஷ்டம், துன்பம், தடங்கல், தாமதம் அனுபவித்து வந்திருப்பீர்கள். சனி பகவான் தற்போது 9 ஆம் இடத்துக்குப் போகப் போகிறார். அஷ்டமத்து சனி உங்களை விட்டு விலகுகிறது. அடுத்த 6 மாதங்கள் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.
துலாம் - துலாமிற்கு 6 ஆம் இடத்திற்கு சனி பகவான் வருகிறார். கடன், நோய், எதிரிகள், தாமதம் ஆகிய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடையப் போகிறீர்கள். சுப கிரகத்தின் வீடு, சனி பகவான் வருவது என அனைத்தும் சுபமாக இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். யோக பலன்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது. நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு சனி பகவான் வருகிறார். இதுவரை இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள், ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் உங்களை விட்டு அகலும். நல்ல முன்னேற்றத்தை அடையும் காலமாக இருக்கும்.
மகரம் - மகர ராசியினருக்கு 2015 முதலே ஏழரை ராசியினால் படாத பாடு பட்டிருப்பீர்கள். எல்லா வகையான பிரச்சனைகளும் நீங்கும். விடிவு காலம் பிறக்கப் போகிறது. இன்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடம்பர வாழ்க்கை, வேலை, லாபம், புதிய வாப்புகள், தொழில் எல்லாமே அமையும். 3 ஆம் இடத்திற்கு வரக்கூடிய சனி பகவான் உங்களுடைய முயற்சி மற்றும் சிந்தனையை அதிகரிப்பார். திறமைகள் கைகொடுக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications