500 ஆண்டுகளுக்கு பின் வரும்.. அபூர்வ சூரிய கிரகணம்! இன்று முதல் 5 ராசிகளுக்கு அடிக்கும் குபீர் யோகம்
சென்னை: இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் நடக்க போகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்கள் இருக்கும். சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பலருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த முறை அமெரிக்கர்களுக்கு அதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கும் போது, அது பூமியில் ஒரு நிழலை ஏற்படுத்துகிறது. பூமியின் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. ஜோதிடத்தில் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் காரணமாக பின்வரும் 5 ராசிகளுக்கு யோகம் அடிக்க போகிறது:
மேஷம்,
ரிஷபம்
கன்னி
விருச்சிகம்
தனுஷ்
மேஷம்: இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு பெரிய லக்கியாக இருக்க போகிறது. இன்று முதல் நீங்கள் தொடங்கும் காரியங்கள் செழிக்கும். இன்று இரவு எடுக்கும் முடிவுகள் பெரிய பலன் கொடுக்கும். பொருளாதாரம் சரியாகும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்: உங்களுக்கு குபேர யோகம் அடிக்க போகிறது. பணம் தேடி வரப்போகிறது. உடல் பிரச்சனைகள் சரியாகும். மனக்கஷ்டங்கள் சரியாகும். புதிய வேலைகள் கிடைக்கும்.
கன்னி: நீங்கள் பட்ட கஷ்டமெல்லாம் இன்று இரவில் இருந்து குறையும். நீங்கள் தேடிய வாய்ப்பு வீடு தேடி வரும். பணம் உங்கள் கணக்கில் கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களின் கனவு வாழ்க்கை தொடங்கும். புதிய வீட்டிற்கு செல்வீர்கள். இன்று முதல் சொந்தமாக கார், பைக் வாங்கும் யோகம் உண்டு. மனக்கஷ்டம் எல்லாமே பறந்து போகும். உடல் ஆரோக்கியம் செழிக்கும்.
விருச்சிகம்: இத்தனை காலம் நீங்கள் வீடு இன்றி, பணம் இன்றி கஷ்டப்பட்டீர்கள். இனி அப்படி இருக்காது. மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். அதில் உங்களுக்கு நல்லது நடக்கும். அதற்கு முன்பாக இன்றே உங்கள் வாழ்க்கையில் நன்மைக்கான டிரைலர் போல நல்ல விஷயங்கள் தொடங்கிவிடும்.
தனுசு ராசி: வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications