தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. தொட்டதெல்லாம் தங்கமாகும் நேரம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு லாபத்தில் சனி பகவான் இருக்கிறார். உத்தியோகம் ரீதியாக கடந்த ஓராண்டாக நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். லாபத்துக்கு வரக்கூடிய சனி பகவான் உங்களுக்கு மிகுந்த மேன்மையைத் தருவார். இதுநாள் வரை வேலையில் இருந்துவந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். களத்திர ஸ்தானதிபதி செவ்வாய் 11 ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்திருப்பதால் முதல் திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

வெளிநாடு வாய்ப்பு
3 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால் நிறைய சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பழைய சொத்துகளை விற்று புது சொத்துகளை வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. காதலை மெல்ல வெளிப்படுத்தி வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்படும். நிதி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் அமைப்பு உள்ளது. ரிஷப ராசியினர் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை வழிபாடு செய்வது, கிரிவலம் வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
அனுகூலம்
ரிஷப ராசியினருக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆடி மாதத்திற்கு மேல் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பணத்தை முதலீடு செய்வது, கூட்டுத் தொழில செய்வதாக இருந்தால் ஏமாறக்கூடிய வாய்ப்புள்ளதால் பணம் சாரந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கேதுவும், ராகுவும் 4, 10 இல் இருப்பதால் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். எல்லை தெய்வ வழிபாடு செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
முன்னேற்றம்
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. எளிமையாக நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகளை சேர்த்து முன்னேறச் செய்வது, உதவி செய்வது நன்மை பயக்கும். உங்கள் இயற்கையான சுபாவத்துக்கு மீண்டும் திரும்புவது நன்மை பயக்கும். இந்த ஆண்டில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வெற்றி பெறும் யோகம் உண்டு.
காதல் திருமணம்
ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். புதிய தெம்பு கிடைக்கும். நிறைய காதல் திருமணங்கள் நடக்கும் யோகம் உண்டு. உங்கள் மனதிற்குப் பிடித்த வரன் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை ஏற்படும். தந்தையார், தந்தை வழி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலை, தொழிலில் கண்டிப்பாக அடுத்த ஒரு வருடத்தில் மாற்றம் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பு உள்ளது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?












Click it and Unblock the Notifications