ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பக்தர்களுக்கு 6 மணி நேரம் அனுமதி இல்லை.. எப்போது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமஞ்சனம் என்படும் தூய்மைப்பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் 6 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

tirumala-tirupati-temple-cleaning-program-ahead-of-ugadi-celebrations

திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாட்களிலும் முக்கிய நாட்களிலும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் கத்துக் கிடந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டியிருக்கும்.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விழாக்களை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. இதன் காரணமாக 2-ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக கோயிலில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் விக்ரகம் வெண்மையான வஸ்திரத்தால் முழுமையாக போர்த்தப்படும். இதையடுத்து, ஆனந்த நிலையத்தில் இருந்து தங்கவாசல் வரையிலும், கோயிலில் உள்ள துணை சன்னதிகள், கோயில் வளாகம் பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்.

இந்த தூய்மைப்பணி முடிந்த பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை பொருட்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.

இந்தப் பணிகள் முடிந்த பிறகு மூலவர் விக்ரகம் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெண்மையான வஸ்திரத்தை அகற்றி வீட்டு சாஸ்திர முறைப்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நைவேத்தியம் சமர்பித்து மதியம் 12 மணிக்கு பக்தர்களை அனுமதிப்பார்கள் இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தெதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+