ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பக்தர்களுக்கு 6 மணி நேரம் அனுமதி இல்லை.. எப்போது தெரியுமா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமஞ்சனம் என்படும் தூய்மைப்பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் 6 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாட்களிலும் முக்கிய நாட்களிலும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் கத்துக் கிடந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டியிருக்கும்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விழாக்களை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. இதன் காரணமாக 2-ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கோயிலில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் விக்ரகம் வெண்மையான வஸ்திரத்தால் முழுமையாக போர்த்தப்படும். இதையடுத்து, ஆனந்த நிலையத்தில் இருந்து தங்கவாசல் வரையிலும், கோயிலில் உள்ள துணை சன்னதிகள், கோயில் வளாகம் பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்.
இந்த தூய்மைப்பணி முடிந்த பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை பொருட்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.
இந்தப் பணிகள் முடிந்த பிறகு மூலவர் விக்ரகம் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெண்மையான வஸ்திரத்தை அகற்றி வீட்டு சாஸ்திர முறைப்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நைவேத்தியம் சமர்பித்து மதியம் 12 மணிக்கு பக்தர்களை அனுமதிப்பார்கள் இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தெதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications