ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பக்தர்களுக்கு 6 மணி நேரம் அனுமதி இல்லை.. எப்போது தெரியுமா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமஞ்சனம் என்படும் தூய்மைப்பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் 6 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாட்களிலும் முக்கிய நாட்களிலும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் கத்துக் கிடந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டியிருக்கும்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விழாக்களை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. இதன் காரணமாக 2-ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கோயிலில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் விக்ரகம் வெண்மையான வஸ்திரத்தால் முழுமையாக போர்த்தப்படும். இதையடுத்து, ஆனந்த நிலையத்தில் இருந்து தங்கவாசல் வரையிலும், கோயிலில் உள்ள துணை சன்னதிகள், கோயில் வளாகம் பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்.
இந்த தூய்மைப்பணி முடிந்த பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை பொருட்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.
இந்தப் பணிகள் முடிந்த பிறகு மூலவர் விக்ரகம் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெண்மையான வஸ்திரத்தை அகற்றி வீட்டு சாஸ்திர முறைப்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நைவேத்தியம் சமர்பித்து மதியம் 12 மணிக்கு பக்தர்களை அனுமதிப்பார்கள் இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தெதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications