புது வீட்டிற்கு செல்லும் போது.. பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா? இந்த பழக்கத்திற்கு என்ன காரணம்?
சென்னை; இந்தியாவில் பலரும் புதிய வீடுகளுக்கு செல்லும் போது பால் காய்ச்சுவது வழக்கம். இந்த பழக்கம் ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா?
இந்தியாவில் இந்துக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவது வழக்கம். அதில் ஒன்று பால் காய்ச்சுவது.

புதிய வீட்டிற்குச் செல்லும் போது அது வாடகைக்கோ அல்லது சொந்தமான வீடோ பால் காய்ச்சுவதுதான் முதல் சம்பிரதாயமாக இருக்கும். புது வீட்டிற்கு செல்லும் போது பெரும்பாலான குடும்பங்களில் வாஸ்து பூஜை, வாஸ்து ஹவன் மற்றும் கணேஷ் பூஜையுடன் 'க்ருஹ பிரவேசம்' செய்வது வழக்கம். அதேபோல் பால் காய்ச்சுவதும் மிக முக்கியமான நிகழ்வு.
பொங்கி வழிய விடும் வரை பாலை காய்ச்சுவதுதான் இந்த வழக்கம். இந்த பாலை கடவுளுக்கு பிரசாதம் கொடுத்த பிறகு, மீதமுள்ள பாலை குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளும் மரபு உள்ளது. ஆனால் மக்கள் ஏன் இந்த சடங்கைப் பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இங்கே பார்ப்போம்.
என்ன காரணம்; ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது என்பது ஒரு 'புதிய வாழ்க்கையின்' தொடக்கமாகும், புதிய தொடக்கத்தை, தூய்மையான தொடக்கத்தை, தடைகள் இல்லாத மற்றும் திருப்தி நிறைந்த வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே பால் காய்ச்சுவதின் நோக்கம் ஆகும்.
இந்து நம்பிக்கையின்படி, பாலை கொதிக்க வைப்பதும், பால் வழிவதும் நம் வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்யும் நிகழ்வு ஆகும். இப்படி பொங்கும் பாலை விநியோகிப்பது குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிலும் இப்படி பொங்கும் பால், கிழக்கு திசையில் பொங்கி விழும் போது அது "செழிப்பின் அடையாளம்" என்றும் கருதப்படுகிறது; ஏனெனில் "கிழக்கு" என்பது இந்திய வாஸ்து படி செழிப்பை, வளர்ச்சியை குறிக்கும்.
அதுவே மேற்கு திசையில் விழும் போது அன்பையும், ஆரோக்கியத்தையும் குறிக்கும் என்பதே இந்தியர்கள் இடையே பரவலாக இருக்கும் நம்பிக்கை ஆகும்.
தூய்மையைக் குறிக்கும் அடையாளமாக பால் இருப்பதால் அது புதிய தொடக்கத்தை குறிக்கும். இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதைக் குறிக்கிறது. அதேபோல் பலரும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறையை அகற்ற உதவுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அதாவது அந்த இடத்திலிருந்து எதிர்மறை சக்தியை நீக்க இந்த சடங்கு உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பால் நிரம்பி வழியும் போது அங்கு தங்கியிருக்கும் குடும்பத்திற்கு ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை அந்த இடத்தில் வந்து நிரம்பி வழியும் என்பது நம்பிக்கை ஆகும்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications