வருகிறது நெகட்டிவ் புள்ளிகள்! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய சிக்கல்! லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு
டெல்லி: சாலை விதிமீறல்களை தடுக்கும் விதமாக ஓட்டுநர் உரிமங்களுக்கு 'எதிர்மறை புள்ளிகள் முறையை' அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நெகட்டிவ் பாயிண்ட்ஸ் முறை.
பல நெகட்டிவ் புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும். அதாவது நீங்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள், சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு நெகட்டிவ் புள்ளி வழங்கப்படும்.
இப்படி உங்கள் தவறுகளுக்கு ஏற்ப உங்களுக்கு நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்படும். இந்த நெகட்டிவ் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் போது உங்கள் லைசன்ஸ் இடைக்காலமாக நீக்கம் செய்யப்படும். விதி மீறல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.
விதிகள் சொல்வது என்ன?
ஏற்கனவே நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபத்தங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. இது மத்திய அரசின் பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இந்த அபாரதங்கள் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால்
அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.
3. சீட் பெல்ட் அணியாதது
சீட் பெல்ட்டைக் அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும்.
4. வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது
வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
5. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். பல மாநிலங்களில் ரூ.2000 அபராதம் இருந்தது .
6. இரு சக்கர வாகனங்களில் டிரிபிள் ரைடிங்
டிரிபிள் ரைடிங் அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதனுடன் மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது சமூக சேவை செய்ய வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. மீண்டும் விதி மீறினால் ₹4,000 அபராதம் விதிக்கப்படும்.
8. மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
மாசுபாட்டின் கீழ் (PUC) சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது சமூக சேவையுடன் கூடிய ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
9. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்
கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.
10. அவசரகால வாகனங்களைத் தடுத்தால்
ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி கொடுக்க தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.
11. பொதுச் சாலைகளில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்
பொது சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவோர் அல்லது வேகமாக ஓட்டினால், மீறுபவர்களுக்கு இப்போது உள்ள ₹500க்கு பதில் ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.
12. ஓவர்லோடிங் வாகனங்கள்
ஓவர்லோடிங் வாகனங்களுக்கான அபராதம் ₹2,000ல் இருந்து ₹20,000 ஆக உயர்ந்துள்ளது.
13. ஜம்பிங் டிராபிக் சிக்னல்கள்
சிக்னல் ஜம்பிங்கிற்கான அபராதம் ₹500ல் இருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
14. சிறார்களின் குற்றங்கள்
சிறார்களால் (18 வயதுக்குட்பட்ட) போக்குவரத்துக் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அபராதம் ₹2,500ல் இருந்து ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் பாதுகாவலர்/வாகன உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வாகனத்தின் பதிவு ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், மேலும் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications