Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி டோல்கேட்களில் நிற்க வேண்டாம்.. சென்னை - பெங்களூர் சாலையில் வருது ஏஐ கேமரா.. முக்கிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும், ஜி.எஸ்.டி. சாலையில் செங்கல்பட்டு நோக்கியும் பயணிக்கும் வாகனங்கள் இனி டோல்கேட்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஃபாஸ்டேக்குடன் ஒருங்கிணைக்கப்பட்ட தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார (ANPR) கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், தற்போதுள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படவுள்ளன.

இந்தக் கேமராக்கள், மணிக்கு 100-150 கி.மீ வேகத்தில் வரும் வாகனங்களின் விவரங்களையும் துல்லியமாகப் பதிவு செய்யும். இதனால், தடையில்லா மற்றும் நெரிசல் இல்லாத பயணத்தை அனுபவிக்கலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) பயனர் கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

Automobile fastag

மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) பயனர் கட்டண வசூல்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்) மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளிலும், தாம்பரம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் (GST சாலை) உள்ள பரனூர் சுங்கச்சாவடியிலும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த இரு நெடுஞ்சாலைகளிலும் தினமும் சுமார் 75,000 வாகனங்கள் பயணிக்கின்றன.

புதிய அமைப்பின் கீழ், தற்போதுள்ள சுங்கச் சாவடிகள் நீக்கப்பட்டு, மேலே பொருத்தப்படும் ANPR கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்களைத் தானாகவே பதிவு செய்யும். பின்னர், தொடர்புடைய ஃபாஸ்டேக் கணக்குகளிலிருந்து சுங்கக் கட்டணம் கழிக்கப்படும். இதனால், வாகனங்கள் நிற்காமல் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லலாம், காத்திருக்கும் நேரம் பூஜ்ஜியமாகக் குறையும்.

ANPR கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் (IHMCL), இந்த MLFF அமைப்பைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கும். இந்த நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒரு ஆபரேட்டரை நியமிக்க சமீபத்தில் டெண்டர் கோரியது.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, ஆறு வழித்தட பிரதான சாலை முழுமையாகத் திறந்திருக்கும், இதனால் வாகனங்கள் கடந்து செல்லும்போது தடையின்றி கட்டணம் கழிக்கப்படும். "இந்தத் திட்டத்தில் முக்கிய உள்கட்டமைப்பை நிறுவுவதுடன் கடுமையான சோதனைகளும் அடங்கும். இந்த அமைப்பு செயல்படுவதற்கு முன்பு பல அடுக்கு சரிபார்ப்புகளுக்கு உட்படுத்தப்படும்" என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, ANPR கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளையும், 40 மீட்டர் தூரம் வரையிலான வீடியோ காட்சிகளையும் பதிவு செய்யக்கூடியவை. ஐந்து வினாடிகள் பதிவு செய்யும் திறனுடன், மணிக்கு 150 கி.மீ வேகத்திலும் பதிவு எண்களைத் துல்லியமாக அடையாளம் காணும். சேவைப் பாதைகள் மற்றும் மண் தரைப்பகுதிகள் உட்பட அனைத்துப் பாதைகளையும் உள்ளடக்கும் வகையில் போதுமான கேமராக்கள் பொருத்தப்படும்.

300 மீட்டருக்கு முன்னதாக ரீடர்

கூடுதலாக, வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு 300 மீட்டருக்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறியும் RFID ரீடர்கள் மற்றும் துணைச் சாதனங்கள் நிறுவப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர், பணி ஆணை பெற்ற 14 மாதங்களுக்குள் நிறுவலை முடிக்க வேண்டும். தானியங்கி கட்டணக் கழித்தல் தோல்வியுற்றால், வாகனங்களிடமிருந்து கட்டணத் தொகையை வசூலிக்கப் பிற்காலத்தில் தனி விதிகள் அறிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+