Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளுக்கு வந்த பெரிய சிக்கல்.. நாளை முதல் வெளியே போவதே ரொம்ப கஷ்டம்.. இதை நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை முதல் சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது,

உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டு உள்ளது . வரும் நாட்களில் மேலும் சில சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tamil Nadu toll gate prices to go up from tomorrow in many routes

அதேபோல் சென்னை டூ பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பயணம் விரைவில் அதிகரிக்க போகிறது. நாளை முதல் டோல் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சென்னை நகரின் புறநகரில் உள்ள நான்கு டோல் பிளாசாக்களில் பயனர் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், இந்த மாத இறுதியில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு செல்வது அல்லது அங்கிருந்து செல்வதற்கான செலவு அதிகமாக உள்ளது.

ஒரு பயணத்திற்கு 5 முதல் 20 வரை உயர்வு இருக்கும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக பெங்களூரு மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான பயணச் செலவு ஏப்ரல் 1 முதல் 150 ஆக உயரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Nadu toll gate prices to go up from tomorrow in many routes

இந்தியக் கூட்டணி சார்பாக மத்தியில் ஆட்சி அமைத்தால், அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுவோம் என்று மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் இந்தக் கட்டணச் உயர்வு மத்திய அரசு மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய டோல்கள்: இது போக தமிழ்நாடில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. மொத்தமாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன., விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன.

ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை: சமீபத்தில்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக அறிக்கையிலும் இதே விஷயம் கூறப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மத்திய பாஜக அரசு கூடுதல் டோல் கேட் அமைக்க முடிவு செய்துள்ளது.

ஒரே டோல்: இதற்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும்.

இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை பிப்ரவரி 29, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எப்படி அப்டேட் செய்வது?: இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். தேவையான பக்கத்தை அணுக, 'FASTag' என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
அங்கே உள்ள "எனது சுயவிவரம்" என்ற பகுதிக்குச் சென்று KYC தாவலைக் கிளிக் செய்யவும்
முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.
அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

உங்கள் FASTag நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் fastag.ihmcl.com என்ற பிரத்யேக இணையதளத்தில் இதை சோதனை செய்யலாம்:
இணையப் பக்கம் திறக்கும் போது, ​​இணையதளத்தின் வலது மேற்புறத்தில் உள்ள உள்நுழைவை கிளிக் செய்ய வேண்டும்
உள்நுழைய OTP வரக்கூடிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும்
உள்நுழைந்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்யவும்
சுயவிவரப் பிரிவில், உங்கள் FASTag இன் KYC நிலை மற்றும் பதிவுச் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட சுயவிவரங்கள் ஆகியவற்றைப் சோதனை செய்யலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+