ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி
சென்னை: மதுரையின் பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஜாக்கி' திரைப்படம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ள மலையாள இயக்குநர் பிரகாபால், ஒரு சாதாரண பயணம் தான் இப்படத்திற்கான விதையாக மாறியதாக கூறியுள்ளார்.

இயக்குனர் கண்ட காட்சி
முதலில் மதுரைக்கு சுற்றுலா வந்த அவர், மீனாட்சி அம்மன் கோவில் அருகே நடந்த 'ஆட்டு சண்டை'யை பார்த்ததே அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த சண்டையின் வன்முறையை விட, ஆடுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பு தான் அவரை அதிகமாக கவர்ந்ததாம்.
கிடா சண்டை
ஜல்லிக்கட்டு பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், 'கிடா சண்டை' போன்ற இந்த பாரம்பரிய விளையாட்டு பலருக்கும் தெரியாதது அவருக்கு புதுமையாக இருந்ததாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கலாச்சாரத்தை திரைப்படமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அப்போது உருவானதாம்.
மதுரை பாரம்பரிய கதை
இதற்காக அவர் சும்மா கதை எழுதவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றி, இந்த விளையாட்டை நேரில் பார்த்து, அதில் ஈடுபடும் மக்களுடன் பேசி ஆராய்ச்சி செய்துள்ளார்.
இந்த ஆட்டு சண்டை ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அது பல குடும்பங்களின் பெருமை, அடையாளம். இதில் வெற்றி பெற்றால் அந்த குடும்பத்திற்கு கௌரவம், தோற்றால் அவமானம். இதனால் பல நேரங்களில் போட்டியும், பகையும் உருவாகும் அளவுக்கு இது உணர்ச்சிபூர்வமான விஷயமாக இருக்கிறது.

கிடா சண்டை பின்னணி
இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் இது பெரிய சவாலாக இருந்ததாம். ஆடுகளை கையாள்வது எளிதல்ல. அதனால் அவர்கள் நேரடியாக ஆடுகளுடன் பழகி, அவற்றுடன் ஒரு உண்மையான பிணைப்பை உருவாக்கி நடித்துள்ளனர். அதனால் தான் காட்சிகள் இயல்பாக வந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றும் மதுரை பகுதியில் பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை தாண்டி, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது.
'ஆடுகளம்' போன்ற படங்களுடன் ஒப்பிடப்படும் இந்த 'ஜாக்கி', அதைவிட வேறுபட்ட கோணத்தில், கமர்சியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில், ஒரு கிராமிய விளையாட்டை மட்டும் காட்டாமல், அதன் பின்னாலுள்ள மனிதர்களின் உணர்ச்சிகளையும், பெருமையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications