பராசக்தி ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் "தற்குறி” டயலாக், இயல்பாக வந்ததா? அல்லது உள்நோக்கமா?
சென்னை: இந்த பொங்கல் சீசனில் தமிழ் சினிமாவின் கவனம் முழுவதும் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் மீதே திரும்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு ட்ரைலர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளன. எந்த ட்ரைலர் அதிக வரவேற்பை பெற்றது? யூடியூபில் எந்த படம் முன்னிலை வகிக்கிறது? அதே நேரத்தில் பராசக்தி ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

பொங்கல் மோதல்
விஜய்யின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான பராசக்தி ஆகிய இரண்டும் ஒரே பொங்கல் வாரத்தில் வெளியாக இருப்பதால், ஆரம்பத்திலிருந்தே இந்த மோதல் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக, விஜய்யின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் மோதுவது குறித்து சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பராசக்தி ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன் பேசியதும் பெரும் கவனம் பெற்றது.
ஜனநாயகன் ட்ரைலர்
முதலில் வெளியான ஜனநாயகன் ட்ரைலரை பார்த்த ரசிகர்களுக்கு, இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அதே நேரத்தில் அரசியல், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஹெச்.வினோத் டச் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டிருப்பதால், இரண்டு படங்களுக்கும் கணிசமான வித்தியாசம் இருக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் லுக், அரசியல் வசனங்கள், மேக்கிங் ஸ்டைல் ஆகியவை ட்ரைலரின் முக்கிய ஹைலைட்டுகளாக அமைந்துள்ளன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த ட்ரைலரை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். ட்ரைலரில் இடம்பெற்ற பல வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பராசக்தி ட்ரைலர்
மறுபக்கம், பராசக்தி ட்ரைலர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், அதர்வா, வில்லனாக ரவி மோகன், தமிழில் முதல் முறையாக ஸ்ரீலீலா ஆகிய கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ட்ரைலரிலேயே, ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டமே படத்தின் மையக் கதைக்களம் என்பதை இயக்குநர் சுதா கொங்கரா தெளிவாக சொல்லிவிட்டார். இதனால் எந்த குழப்பமும் இல்லாமல் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பராசக்தி ட்ரைலருக்கு பெரிதாக நெகட்டிவ் விமர்சனங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பார்வையாளர்கள்
ட்ரைலர் ரியாக்ஷன்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் சரி சமமான வரவேற்பை பெறுவதாக தெரிகிறது. ஆனால், யூடியூப் பார்வையாளர் எண்ணிக்கையில் ஜனநாயகன் ட்ரைலர் தான் முன்னிலையில் உள்ளது. பராசக்தியை விட பல மில்லியன் பார்வைகளை அதிகமாக பெற்று, ஜனநாயகன் ட்ரைலர் சாதனை படைத்து வருவதாக படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்குறி வசனம்
இதற்கிடையே, பராசக்தி ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் தற்போது தனியாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. "எட்டாவது படித்த என்னை, படிக்காத தற்குறி ஆக்கிவிட்டார்கள்" என்ற சிவகார்த்திகேயனின் வசனம், இயல்பான கதைசூழலுக்கானதா அல்லது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
சில ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள், "தற்குறி" என்ற வார்த்தை, பொதுவாக விஜய் ரசிகர்களை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது. அப்படி இருக்க, இந்த வார்த்தையை பராசக்தி ட்ரைலரில் பயன்படுத்தியது, மறைமுகமாக ஜனநாயகன் அல்லது விஜய் ரசிகர்களை குறிவைத்து வைக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
மற்றொரு தரப்பினர், இது முழுக்க முழுக்க கதாபாத்திரத்தின் சூழ்நிலைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை, இதில் எந்த அரசியல் அல்லது ரசிகர் மோதல் நோக்கமும் இல்லை என வாதிடுகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
சிவகார்த்திகேயன் ரசிகர்கள், "ஒரு சமூக போராட்டக் கதையில் வரும் வசனத்தை ரசிகர் மோதலாக மாற்றுவது தேவையற்றது" என்கிறார்கள். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் சிலர், "இப்படி ஒரு வார்த்தையை இப்போது பயன்படுத்துவது திட்டமிட்டது போல இருக்கிறது" என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த தற்குறி என்ற டயலாக் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications