கருணாஸ் மகன் “கென்”ஆல் தான் மீண்டும் பிறந்தேன்! சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டம்... நடிகை நளினி உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் கருணாஸ். நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து பின்னர் கதாபாத்திர நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களில் ரசிகர்களுக்கு தெரிந்தவர். இப்போது அவரின் பாதையைப் போலவே அவரது மகனும் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
கருணாஸின் மகன் கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே பல படங்களில் நடித்தவர். ஆனால் இந்த முறை அவர் இன்னும் பெரிய பொறுப்பை ஏற்று இருக்கிறார். கதாநாயகனாக நடித்ததுடன், தானே இயக்கியிருக்கும் புதிய படம் தான் யூத். இந்த படம் தற்போது வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்று வருகிறது.

நளினியின் உணர்ச்சிமிகு பேச்சு
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகை நளினி பேசும்போது கூறிய வார்த்தைகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நளினி பேசும்போது, "நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு காலத்தில் சினிமாவில் தொடர்ந்து நடித்தேன். ஆனால் சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். இப்போது பெரும்பாலும் சீரியல்களில் தான் நடித்து வருகிறேன். அதுவே போதும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில்தான் கருணாஸ் மகனிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது," என்று கூறினார்.
அவர் மேலும் சொன்னது பலரையும் உருக்க வைத்தது. "அந்த போன் தான் எனக்கு மறுபிறவி மாதிரி. அந்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நான் நடித்த அனுபவம் ரொம்ப ஸ்பெஷல். நான் இதற்கு முன்பு பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு சீனிலும் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க வைக்க அவர் முயற்சி செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது," என்று நளினி உணர்ச்சியுடன் கூறினார்.
சூட்டிங் அனுபவம்
ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி பேசும்போது அவர் சிரிப்போடு ஒரு சம்பவத்தையும் பகிர்ந்தார். "எந்த டேக் எடுத்தாலும் 'அம்மா இன்னொரு டேக்... இன்னும் கொஞ்சம் நேரம்...' என்று சொல்லி கெஞ்சுவார். அவ்வளவு அன்பாக பேசுவார். ஒரு பையன் மாதிரி தான். நம்மை பெரிய நடிகையா மதித்து பேசுவார். அப்படியே எப்படியோ நம்மிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கி விடுவார்," என்று நளினி கூறினார்.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் சிரமம் இருந்ததாகவும் அவர் நகைச்சுவையாக சொன்னார். "சாப்பாடு தான் கஷ்டம். 'தம்பி பசிக்குது... சாப்பிட போறேன்' என்று சொன்னாலும், 'அம்மா இந்த ஒரு டேக் மட்டும்' என்று சொல்லி வேலை வாங்கி விடுவார். ஆனா இப்போ அந்த ஷூட்டிங் முடிந்ததை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அந்த அளவுக்கு அந்த நாட்கள் ரொம்ப சந்தோஷமா இருந்தது," என்று அவர் கூறினார்.
வில்லி வேடம் கிடைக்கும் என்று நினைத்தேன்
இந்த படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் குறித்து பேசும்போது நளினி இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்தார். "சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரம்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நான் இதுவரைக்கும் நடித்ததே இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதாவது ஒரு காலேஜ் பிரின்சிபல் ஆக நடிக்கிறேன். அந்த கேரக்டர் தான் கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி," என்று அவர் தெரிவித்தார்.
கருணாஸின் மகனை பாராட்டிய நளினி
நளினி தனது பேச்சின் இறுதியில் கருணாஸையும் அவரது மகனையும் பாராட்டினார். "கருணாஸ் எப்படி உழைத்து இந்த நிலைக்கு வந்தாரோ அதே மாதிரி அவருடைய பையனும் ரொம்ப உழைக்கிறார். இன்னும் பெரிய உயரம் அடைவார். அதற்கான திறமையும் வேகமும் அவரிடம் இருக்கிறது," என்று அவர் பாராட்டினார்.
முட்ட கலக்கி பாடல் வைரல்
இந்த படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள "முட்ட கலக்கி" பாடல் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது. முட்டை கலக்கி என்ற இந்த பாடல் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கப்படும் பாடலாக மாறி இருக்கிறது.
நடிகர்கள், நடிகைகள், காலேஜ் மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அதனால் இந்த பாடல் இளைஞர்களிடையே ஒரு பெரிய ட்ரெண்டாக மாறி இருக்கிறது.
தலைமுறைகள் இணைந்த படம்
இந்த படத்தில் பல தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த நடிகைகள், மறுபக்கம் புதிய தலைமுறை நடிகர்கள் என கலந்து உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஒரு காலத்தில் கருணாஸ் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலம் இருந்தது. இன்று அவருடைய மகன் தான் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து, முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து படம் எடுத்து வருவது பலரையும் பெருமைப்பட வைத்திருக்கிறது.
அதனால் தான் "கருணாஸின் பயணம் போலவே அவருடைய மகனின் பயணமும் வெற்றி பெற வேண்டும்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த காரணங்களால் யூத் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.
-
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?













Click it and Unblock the Notifications