For Quick Alerts
For Daily Alerts
Just In
குறிப்பெழுதுங்கள்
தாவிவிடும் வண்டதின்
இயல்பு விளங்காமல்
வினவும் பதினாரு வயது
பருவப்பூவிற்கு
நினைவடுக்குகளில் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும்
வாழ்க்கைப்பாடங்களைக்
கோர்வையாய் சேர்த்துப்
பழகிடாத நிலையில்
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
கட்டில் அடங்காத மனக்குரங்கை
அதன் போக்கில் விட்டு,
இன்றைய பொழுது
நம்பொழுது,
நாளையென்பது
பகல் கனவென்று,
காரணம் சொல்லி
சிற்றின்பங்களைக் கணக்கெடுக்கும்
இளந்தளிர்களுக்கு
வாழ்க்கையென்பது என்னவென்று
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
இப்படி
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது,
நம் வாழ்க்கையைக்
குறிப்பெழுதியிருக்கலாமென்று...
Comments
Story first published: Tuesday, September 15, 2009, 12:11 [IST]