Debate: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு சொல்வது என்ன?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளையும், பரபரப்புகளையும், மண்டை உடைப்புகளையும், பண மழை, பட்டி அடைப்பு குற்றச்சாட்டுகளையும் பார்த்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதன் மூலம், தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. அவர் பெற்ற ஓட்டுக்கள், 110556. அதிமுக வேட்பாளர் தென்னரசு 43981 ஓட்டுகள் பெற்றுள்ளார். நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள், திமுக கூட்டணி கட்சியினர். பணநாயகம் வென்றுவிட்டது என்கிறார் தென்னரசு. பாதியிலேயே ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து கோபமாகவும் கிளம்பியுள்ளார்.

பிரச்சார களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாம் தமிழர் கட்சியோ 8474 ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளது. தேமுதிக, தனது சரிவு பாதையை தொடர்ந்துள்ளது. பெற்ற ஓட்டுக்கள் வெறும், 1177. ஒரு காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, சுயேச்சைகளோடு, போராடியதை பார்த்தவர்களுக்கு விஜயகாந்த்தின் அருமை, பெருமை புரிந்திருக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் முடிவுகளின் பருந்துப் பார்வை இது. உங்களது உள்ளார்ந்த பார்வை என்ன? ஈரோடு கிழக்கு வெற்றியின் உண்மையான அர்த்தம் என நீங்கள் நினைப்பது எதை? நீங்கள் ஏற்பது, திமுக கூட்டணி வாதத்தையா, அதிமுக கூட்டணி குற்றச்சாட்டையா? கருத்துக்களை பதிவிடுங்கள், உங்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை உலகம் அறியட்டும்.












Click it and Unblock the Notifications