உக்ரைனில் ரஷ்ய கடற்படைத்தளம்
இந்த கிரைமியாவில் உள்ள ஸ்வெஸ்டோபோல் நகரில் இன்னும் ரஷ்யாவின் கருங்கடல் பிரிவு கடற்படை நிலை கொண்டிருக்கிறது. அதாவது சுதந்திர நாடாக இருந்தாலும் இந்த நாட்டை ஆண்டவர்கள் பலரும் ரஷ்ய ஆதரவு நிலை கொண்டே இருந்ததால் ரஷ்ய கடற்படை இங்கு சுதந்திரமாக வலம் வருகிறது.

சுமார் 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் உக்ரைனியர்கள். 17 சதவீதம் பேர் ரஷ்யர்கள். மேலும் பெலாரஷ்யர்கள், ருமேனியர்களும் கணிசமாக வசிக்கின்றனர். உக்ரைன் தான் இந்த நாட்டின் தேசிய மொழி என்றாலும் சோவியத் ஆளுமையில் இருந்ததால் ரஷ்ய மொழியும் பரவலமாக பயன்பாட்டில் உள்ளது.
இந்த நாட்டை ஆக்கிரமிக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பல நூற்றாண்டுகளாகவே பல போர்கள், தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 1657 முதல் 1686 வரை 30 ஆண்டுகாலம் இந்த நாட்டைக் கைப்பற்ற ரஷ்யா, போலந்து, துருக்கி மற்றும் கோசாக்ஸ் பிரிவினரிடையே போர் நடந்தது. இதில் ஸ்வீடனும், லித்துவேனியாவும் தலையிட்டு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் நடந்தது.












Click it and Unblock the Notifications