Fact Check: கருணாநிதி கைதின் போது ஸ்டாலின் ஒளிந்து கொண்டார் என ஆதவ் அர்ஜுனா பேசியது பொய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2001ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கைதுக்கு பயந்து ஓடிப் போனதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கரூர் விவகாரத்திற்கு பின் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கரூர் சம்பவத்திற்கு பின் பொதுச்செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார் என்கிறார்கள்.

Aadhav Arjuna CM Stalin Karunanithi Vijay

யார் ஓடினார்கள்? கலைஞர் கைதின்போது நீங்கள் (ஸ்டாலின்) ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள் என்று பேசி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சில் கலைஞர் கைதின் போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்து கொண்டதாக கூறி இருக்கிறார். 2001ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

அதன்பின் 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மட்டுமல்லாமல், முரசொலி மாறன் வீட்டையும் காவல்துறையினர் சூழ்ந்தனர். அதேபோல் அப்போதைய சென்னை மாநகராட்சியின் மேயரான ஸ்டாலினின் வீடும் காவல்துறையினரால் வளைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்டாலின் பெங்களூரில் இருந்திருக்கிறார். தொடர்ந்து கருணாநிதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளான ஜூன் 30ஆம் தேதியே ஸ்டாலினின் நீதிபதி அசோக் குமார் முன்னிலையில் சரணடைந்துள்ளார். அதன்பின் ஸ்டாலினுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், முதலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின் மதுரை மத்திய சிறைக்கு ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். இது பல்வேறு செய்தி தாள்களிலும் வந்துள்ளது. அதேபோல் கைதுக்கு பயந்து ஸ்டாலின் தலைமறைவாக வேண்டும் என்றால், அடுத்த நாள் காலையில் ஸ்டாலின் ஆஜராகாமல் இருந்திருக்கலாம். அடுத்த நாளிலேயே ஸ்டாலின் நீதிபதி முன் சரணடைந்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

Fact Check

வெளியான செய்தி

கலைஞர் கைதின்போது நீங்கள் (ஸ்டாலின்) ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்

முடிவு

அப்போதைய சென்னை மாநகராட்சி மேயரான ஸ்டாலின் அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதான விஷயம் தெரிந்து, அடுத்த நாள் காலை சென்னை வந்த ஸ்டாலின், நீதிபதி அசோக் குமார் முன்னிலை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+