ட்ரம்ப் சொன்னதை நம்பி டெட்டால், லைசாலை குடிச்சிராதீங்க.. ஒரு எச்சரிக்கை
சென்னை: COVID-19 நோயாளிகளுக்கு கிருமிநாசினிகளை குடிக்க வைத்து வைரஸைக் கொல்ல முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இதை நம்ப வேண்டாம் என டெட்டால், லைசால் போன்ற கிருமிநாசினி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
Recommended Video
"ஒரு நிமிடத்தில், கொரோனா வைரசை அழிக்கும் கிருமிநாசினிகளை கைகளை கழுவ நாம் பயன்படுத்தி வருகிறோம்.. இந்த கிருமிநாசினியை உடலின் உள்ளே ஊசி மூலம் செலுத்த ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?" என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும் வெயிலால் கொரோனா பரவல் குறையும் என்ற ஆய்வு முடிவை சுட்டிக் காட்டி, உடலை வெப்பப்படுத்தலாமே என்றும் ஐடியா சொன்னார்.

மருத்துவ உலகில் இது விமர்சனத்திற்கு உள்ளானதால், அது வேடிக்கையாக சொல்லப்பட்ட வார்த்தை என ட்ரம்ப் இன்று சமாளித்துள்ளார்.
இந்த நிலையில் டெட்டால் மற்றும் லைசால் தயாரிப்பாளரான ரெக்கிட் பென்கிசர் நிறுவனம், மனித உடலில் கிருமிநாசினி தயாரிப்புகளை உட்செலுத்த கூடாது என்று மக்களை எச்சரித்துள்ளது.
"சமீபத்திய ஊகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகள் காரணமாக, கிருமிநாசினிகளை விழுங்கினால் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) சிகிச்சையில் அது பயன்படுமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் கிருமிநாசினி பொருட்கள் ஊசி, குடிப்பது அல்லது வேறு எந்த வழியிலும் மனித உடலில் செலுத்த கூடாது. இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். எல்லா தயாரிப்புகளையும் போலவே, எங்கள் கிருமிநாசினிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டஉள்ள, நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களின்படி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். லேபிள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் படிக்கவும். வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட வேண்டும். உட்கொள்ளக் கூடாது" இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications