வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்ய முடியாது.. வதந்திகளை நம்ப வேண்டாம்
சென்னை: கொரோனா தடுப்பூசியை வாட்ஸ்அப்பில் பதிவு செய்யலாம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. ஆனால் அந்த தகவல் பொய்யானது. நம்ப வேண்டாம். நீங்கள் வாட்ஸ்அப் மூலம் கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாது.
வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி பதிவு செய்ய நீங்கள், உங்கள் பெயர், வயது மற்றும் ஆதார் அல்லது எந்த அரசாங்க ஐடியுடன் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம் என்று போலி தகவல் பரவி வருகிறது.
நீங்கள் வசிக்கும் பகுதியின் பின்கோடு எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோசுக்கு பதிவு செய்யலாம் என்றும் அது கூறுகிறது.
இந்த தகவல் முற்றிலும் தவறானது. COVID-19 தடுப்பூசிக்கான பதிவு COWIN போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது ஆப் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
COVID-19 தடுப்பூசிக்கு நீங்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதற்கான படிகள் கீழே உள்ளன. மேலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே டோஸ் எடுக்க தகுதியுடையவர்கள்.
எவ்வாறு பதிவு செய்வது?
தடுப்பூசிக்கு முன்னர் பயனாளிகள் கோ-வின் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும், மேலும் சி.வி.சி நோடல் அதிகாரிகள் பதிவு நடந்துள்ளதை உறுதி செய்வார்கள்.
Fact Check
வெளியான செய்தி
கொரோனா தடுப்பூசியை வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம்
முடிவு
COWIN போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது ஆப் மூலமாகத்தான் நீங்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்