இந்திய ரயில்வே துறையை அதானி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களா? பரவும் வதந்தி.. பின்னணி!
டெல்லி: இந்திய ரயில்வே துறையை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்திகள் பரவி வருகிறது.
இணையத்தில் சமீப நாட்களாக நெட்டிசன்கள் சிலர் பொய்யான வதந்திகளை பரப்புவதை வழக்கமாக வைத்து உள்ளனர். சின்ன சின்ன அளவில் வதந்திகள் இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் வதந்திகள் பரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வேயை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

அதன்படி இந்திய ரயில்வே மொத்தமாக விற்கப்பட்டுவிட்டது. அதனுடைய 7 தொழிற்சாலைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, விற்பனைக்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 3.5 லட்சம் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக அதானி நிறுவனம் இந்திய ரயில்வேயை வாங்கி உள்ளது.
இணையத்தில் இது தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதோட இந்திய ரயில்வேயை அதானி ரயில்வே என்று மாற்றிவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் இப்படி பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க பொய்யாகும்.
உண்மையில் இந்தியாவில் ரயில்வே துறையில் சில பிரிவுகளை மட்டும் தனியார் மயமாக்கி உள்ளனர். உதாரணமாக சரக்கு ரயில் போக்குவரத்தை அதானி நிறுவனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. மற்றபடி மொத்தமாக ரயில்வே தனியாருக்கு விற்கப்படவில்லை.
இது தொடர்பாக இணையத்தில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

Fact Check
வெளியான செய்தி
இந்திய ரயில்வேயை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.
முடிவு
ரயில்வே துறையை அதானி குரூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்திகள் பரவி வருகிறது.
ரேட்டிங்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications