ஹெலிகாப்டரிலிருந்து மத்திய அரசு கட்டுக் கட்டாக பணம் போடப் போகுது.. தீயாக பரவும் பொய் செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டரிலிருந்து மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வாரி இறைக்கப்போகிறது என்று ஒரு மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பை தடுக்க லாக்டவுனை இந்தியா முழுக்க மே 3ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த காலகட்டங்களில், பொருளாதார பாதிப்பில் தவிக்கும் மக்களுக்கு, உதவி செய்ய ஒரு நிதி பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது ஒரு நிதி பேக்கேஜ் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அறிவிப்பு வரவில்லை.

Fake: The government is not going drop money from helicopters

இந்த நிலையில்தான், மக்கள் கையில் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி ஹெலிகாப்டரில் இருந்து அரசு பணம் தூவப்போவதாக கூறி செய்திகள் வலம் வருகின்றன. இதை நம்ப வேண்டாம் மக்களே என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்தியர்களுக்கும் தலா ரூ .15 ஆயிரம் தருவதாக ஒரு செய்தி வந்தது. இந்த கடினமான காலங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் ரூ .15,000 வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது போலியானது, இதுபோன்ற எந்த அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை.

பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. அவர் லாக்டவுனைத்தான் மே 3 வரை மட்டுமே நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு யோசனையா | ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை மாதம்?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+