Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு ஆதரவளித்ததால்.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டமா? உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டப்பேரவை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவளிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டங்கள் நடப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியாகி பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜகவுக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியமைக்கிறது. தனியாக பாஜக 240 தொகுதிகளை ஜெயித்திருக்கிறது.

Andhra Pradesh Chandrababu Naidu Telugu Desam Party

இது கடந்த முறையை விட 63 சீட்டுகள் குறைவு. எனவே கூட்டணியுடன் சேர்த்து 293 என பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. இந்த கூட்டணி பலத்தில் முக்கியமாக இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று தெலுங்கு தேசம் கட்சி, மற்றொன்று ஐக்கிய ஜனதா தளம். எனவே இந்த கட்சிகளின் எம்பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருக்கையில், ஆந்திராவில் போராட்டங்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா லோக்சபா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனியாகவும், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜன சேனா கட்சி ஆகியவை சேர்ந்து ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் இடதுசாரிகள் என ஒரு கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சி தனியாகவும் போட்டியிட்டன.

இதில் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 25 இடங்களில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், 3ல் பாஜகவும், 2ல் ஜன சேனாவும் வெற்றி பெற்றன. மீதமுள்ள 4 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் வெற்றி பெற்றது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலில், மொத்த முள்ள 175 தொகுதிகளில் 135ஐ கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது.

Andhra Pradesh Chandrababu Naidu Telugu Desam Party

இந்நிலையில் மத்தியில் புதியதாக அமைய உள்ள பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளித்திருக்கிறது. இதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்துக்கிறார்கள் என்றும், போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயில் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வீடியோ பரவி வருகிறது. டிவிட்டரில் இந்த வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த வீடியோ பழையது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 13ம் தேதி ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது மே 12ம் தேதியன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இந்த வீடியோவில் உள்ள புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

"சந்திரபாபு நாயுடுவை இந்த மாநிலம் நாளை நிரந்தரமாக நீக்க வேண்டும். நாளை மிகப்பெரிய திருவிழா நாள். வாக்களிப்பதன் மூலம் இதனை கொண்டாடுங்கள்" என இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். எனவே இதுபழைய வீடியோ என்று நிரூபணமாகியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவளித்ததால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

முடிவு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருப்பதாக பகிரப்படும் வீடியோ பழையது.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+