Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவில்லிபுத்தூர் டூ மதுரை.. அரசு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வா? தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் சென்ற பேருந்தில் டிக்கெட் கட்டணம்உயர்த்தப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், முற்றிலும் வதந்தி என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் இந்த மாதம் தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. உதாரணமாக 5000 பணத்தை திரும்ப அரசு எடுத்துக்கொள்ளும், வரிகளை உயர்த்தும் என்று பல்வேறு தகவல்கள் பரவின.

Srivilliputhur to Madurai Are government bus fares high Tamil Nadu government explains

அப்படித்தான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் ஒரு அதிமுக ஆதரவாளர் பரப்பினார். இதனை பலரும் உண்மை என்று நம்பினார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது எக்ஸ் தளபக்கத்தில் கூறியுள்ளது.

பரவிய செய்தி

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது..

செந்தில் பாலாஜி + ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு
செந்தில் பாலாஜி + ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு

உண்மை என்ன?

இது குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்தே 75 ரூபாய்.

'அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. அப்பேருந்திற்கு திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு G.O Ms 48 நாள் 28.01.2018 -ன்படி குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை' என்று மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இருக்கையில் அமர வேண்டிய செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம்.. தவறவிட்டது எப்படி?
எடப்பாடி பழனிசாமியின் இருக்கையில் அமர வேண்டிய செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம்.. தவறவிட்டது எப்படி?

பொதுவாகவே தேர்தல் காலங்களில் பேருந்து கட்டணம், மின் கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பான வதந்திகள் பரவி வருவது வழக்கம். அதனை தமிழகஅரசின் தகவல் சரிபார்ப்பு மையம் அம்பலப்படுத்தி வருகிறது. இப்போது பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது..

முடிவு

திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படவில்லை

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+