70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்- அறிய வேண்டிய 15 பாயிண்ட்ஸ்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ5 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

70-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள்:
1. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா-ABPMJAY என்பது மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
2. 2018-ல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட போது வருவாய் குறைந்த பிரிவு மக்களுக்கானதாக இருந்தது.
3. 70 வயத்துக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த திட்டத்துக்கு செப்.11-ந் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
4. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு வருமான வரம்பு எதுவும் இல்லை.
5. நாட்டின் மொத்த மூத்த குடிமக்கள் 6.5 கோடி. 6.5 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்பங்கள் எண்ணிக்கை 4.5 கோடி
6. 1 குடும்பத்துக்கு ரூ5 லட்சம் என மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
7. மருத்துவ காப்பீடு பெறும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்படும்
8. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனாளியாக இருந்தாலும் மூத்த குடிமக்களுக்கு தனியாக ரூ5 லட்சத்துக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
9. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால் ரூ5 லட்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
10. இத்திட்டத்தின் கீழான செலவுகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்
11. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
12. தனியார் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு செய்த மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையாலாம்.
13. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு மொத்தம் ரூ 3,437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
14. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்கிற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு குறைவாக உள்ளோருக்கு இந்த காப்பீட்டுத் திட்டம். தற்போதைய ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்த திட்டத்துடன் இணைந்ததாக செயல்படுத்தப்படும்.
15. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தவர்களுக்கு ரூ2 லட்சம், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ரூ5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications