Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்ட முடி வளர்ச்சிக்கு நெய்.. வறண்ட தலைமுடிக்கு பால், வெண்ணெய் தடவலாமா? பொடுகு நீங்க தயிர் போதுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி வளர்ச்சியில் லாக்டோ பொருட்களின் பலன்கள் அபரிமிதமானது.. அந்தவகையில், பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, தலைமுடி உதிர்தலை எப்படி கட்டுப்படுத்தலாம் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.

பாலை பொருத்தவரை ஏராளமான புரோட்டீன் உள்ளது.. இந்த புரதங்கள் தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தி, புதிய முடிகள் வளர்வதற்கும் உதவுகின்றன.. அதேபோல, பாலில் வைட்டமின் D நிறைந்துள்ளதால், முடிகள் உதிர்வது தடுக்கப்படுகின்றன..

hair growth hair fall butter milk

கொலாஜன்: பாலில் வைட்டமின் C சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது... பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள், முடிகள் வளர்வதை ஊக்குவிக்கின்றன.. இதனை தவிர, வைட்டமின் B6, B7, E, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் பாலில் உள்ளதால், இவைகளை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது, அவை வலுவாகின்றன... பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கும், வறண்ட தலைமுடி உள்ளவர்களுக்கும், மிகச்சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது.. இதனால் முடிவெடிப்புகள் குறைந்து, பளபளப்பும் கூடுகிறது..

எனவே, தலைமுடியில் பால் தடவி அலசி, இறுதியில் மென்மையான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.. அல்லது முட்டையுடன் பால் கலந்து மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம்.. அல்லது தேனுடன் பால் கலந்தும் தலைமுடியில் தேய்க்கலாம்.

புளித்த தயிரை நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்தும்போது, முடி வலுப்பெறும்.. காரணம், தயிரில் ஊட்டச்சத்து உள்ளதால், தலைமுடியின் வேர்கள் பலம்பெறுகின்றன..

புளித்த தயிர்: எனவே, புளித்த தயிரை கலக்கி தலையில் தடவி ஊறவைத்து குளிக்க வேண்டும். இதனால் தலைமுடியும் மென்மையாகும். அதேபோல, புளித்த தயிருடன், முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் தலைமுடி பொலிவாகும். அல்லது கற்றாழை ஜெல்லையும், புளித்த தயிருடன் விழுது போல அரைத்து தலைக்கு தடவலாம். இதனால் பொடுகு, வறட்சித்தன்மை நீங்கும்.. தயிரிலுள்ள ப்ரோடீன்கள் தலைமுடியை வலுவாக்கும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெய்யையும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். வெண்ணையில் வைட்டமின் E, B12, புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவைவையும் நிறைந்துள்ளதால், தலைமுடி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரம் ஒருமுறை வெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு சீகைக்காய் போட்டு அலசி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

நெய்: தலைமுடி ஆரோக்கியமில்லாமலும், உறுதியில்லாமலும் இருந்தால், நெய்யை தாராளமாக தடவி வரலாம். காரணம், நெய்யிலுள்ள கொழுப்பு அமிலமானது, தலைமுடியின் சேதத்தை தடுத்து, வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குகிறது. இதனால் தலைமுடி உறுதியாகிறது. ஆனால், நெய் மட்டுமே நேரடியாக பயன்படுத்தாமல், சிறிது தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து, லேசாக சூடுபடுத்தி தடவ வேண்டும்.

அல்லது வேப்பிலையை நெய்யுடன் சேர்த்து எண்ணெய் போல காய்ச்சி தடவலாம். அதாவது ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் தேன், 15 வேப்பிலையை போட்டு இரவெல்லாம் ஊறவைக்க வேண்டும். காலையில் இதனை லேசாக சூடுபடுத்திவிட்டு, வேப்பிலையை நீக்கிவிட்டு, நெய்யை மட்டும், இளஞ்சூட்டிலேயே தலைக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. பொடுகு, இளநரையும் தடுக்கப்படும்.

நீர்மோர்: தலைமுடிக்கு நீர்மோர் மிகவும் நல்லது.. இந்த மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, மோரை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும். தலைமுடியும் வலுப்பெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+