Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயாளியின் கால் புண்கள்.. லேசில் ஆறாத ரணம்.. ஆவாரம்பூ இலையை இப்படி ட்ரை பண்ணுங்க.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகள் பலரையும், பாடுபடுத்துவது அவர்களது கால் புண்கள்தான். இந்த புண்கள் ஏன் வருகின்றன? இதனை குணப்படுத்த எளிய மருத்துவம் உள்ளதா?

சர்க்கரை நோயாளிகளில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்புகள்தான்.. நீரிழிவு நோய் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாக குறைந்துவிடும்.

நரம்புகள்: ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் இதை உணர முடியாது. ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும்.. நரம்புகளில் தளர்வு ஏற்பட்டுவிடும்.. அதேபோல கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டமும் போதுமானதாக இருக்காது. இதனால் அரிப்புகள் ஏற்படும்போது சொறிந்துவிடும்போது, புண்கள் வெளிப்படுகின்றன..

Health Health Tips diabetic patients

அதிகமாக நடப்பது, அதுவும் வெறுங்கால்களால் நடப்பது, கால்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, போன்ற காரணங்களினால் கால் புண்கள் அதிகமாக வருகின்றன.. இந்த புண்கள் எளிதில் நீங்குவதுமில்லை. புண்களில் கிருமித்தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது.

கால் புண்கள்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தாலும்கூட, காயங்கள் எளிதில் ஆறாது.. எனவே சர்க்கரை நோயாளிகள் கால்களை முறையாக பராமரிக்க வேண்டும்.. மருத்துவர்களை சந்தித்து கால் புண்களை குணமாக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.. ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற புண்களை குணமாக்காவிட்டால், உறுப்புகளை காப்பாற்றுவதிலும் சிகிச்சையில் சிரமம் வந்துவிடும்.

அதேபோல, சில எளிய மருத்துவத்தையும் நாம் வீட்டிலேயே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்ற, ஆவாரம்பூ இலை பேருதவி செய்வதாக சொல்கிறார்கள்..

ஆவாரம் பூக்கள்: ஆவாரம்பூ இலை பொடிகள், நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன. இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தி இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும். பிறகு இதனை ஒரு பருத்தி துணியில் வைத்து நன்றாக மடித்து வைத்து கொள்ள வேண்டும்..

புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை சுடுநீரில் சுத்தமாக கழுவி, துடைத்து கொண்டு, அந்த இடத்தில் இந்த பருத்து துணியை வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.. ஒருமணி நேரம்கழித்து அப்படியே வைத்திருந்தால் போதும்.. இப்படி தினமும் செய்து வந்தாலே சர்க்கரை நோய் புண்கள் மெல்ல ஆறும் என்கிறார்கள்.

அதேபோல, நீர்முள்ளி செடியின் இலைகள், அதன் விதைகளுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, துணியில் வைத்து மடித்து, புண்களின் மீது கட்டிவிட வேண்டும். ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதாலும் புண்கள் ஆறிவிடும்.

டாக்டர் அட்வைஸ்: அதேபோல, வேப்பம் பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால், அனைத்து புண்களையும் ஆற்றும் என்கிறார்கள். ஆனால், வீட்டு வைத்தியங்களே என்றாலும், ஆயுர்வேத டாக்டர்களின் ஆலோசனையை முறைப்படி பெற்று கடைப்பிடிப்பதே ஆரோக்கியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+