தோசைக்கு அரைக்கறீங்களா? நீங்க இட்லி மாவு பாக்கெட்டை கடையில் வாங்கறீங்களா? அப்ப இந்த டிப்ஸ் பாருங்க
சென்னை: இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்கறீங்களா? அப்ப இந்த விஷயத்தையும் நோட் பண்ணிக்குங்க.
இப்போது, இட்லி, தோசை நம்முடைய தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. எளிதில் ஜீரணமாக கூடிய சத்தான உணவாகவும் இட்லி கருதப்படுகிறது.. வீடுகளில் இன்றும் பலர் இட்லி, தோசை மாவு அரைத்து பயன்படுத்துகிறார்கள்.

எனினும் நிறைய பேர் வேலைக்கு செல்கிறார்கள்.. இவர்களால் தினந்தோறும் இட்லிக்கு மாவு அரைக்க முடிவதில்லை.. எனவே, பாக்கெட் இட்லி மாவு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..
பாக்கெட் மாவு: அதேபோல பேச்சுலர்களுக்கு எளிதில் கை கொடுப்பதும் இந்த இட்லி மாவு பாக்கெட்டுகள்தான். இதனால், பெண்களின் வேலைச்சுமை குறைகிறது... பேச்சுலர்களின் சாப்பாட்டு பிரச்சனையும் தீர்கிறது. அதைவிட முக்கியமாக, மாவு விற்பனை செய்பவர்களுக்கும் சிறந்த தொழிலாக கை கொடுக்கிறது.
ஆனால், கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள் நம்முடைய உடலுக்கு தீங்கு தரக்கூடியவை என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.. காரணம், இந்த மாவில் எளிதில், புளிப்பு வாசனை வராமல் இருப்பதற்காகவே, புண்களுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் (Boric Acid), ஆரோட் மாவு போன்றவற்றை சிலர் கலந்து விற்கிறார்களாம்.
ஆரோக்கியம்: அதேபோல, மாவு புளித்து போகாமல் இருப்பதற்காக, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது.. இவைகளை சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் தடைபடுகிறது.. வயிறு உபாதைகள், அஜீரணம் ஏற்படுகின்றன.. அதேபோல, உடலுக்கு பல நன்மைகளை தரும் வெந்தயத்தையும், அரிசியில் கலந்து பலரும் அரைப்பதில்லையாம்.
முக்கியமாக, நீண்ட நேரத்துக்கு கிரைண்டர்களில் மாவு அரைக்கும்போது, ஆட்டுக்கல் சிறிது சிறிதாக தேய்ந்து மாவில் கலக்கிறது.. இந்த கற்களை நாம் உண்ணும்போது, சிறுநீரகத்தில் கற்கள் வர நேரிடுகிறது. மேலும், இந்த மாவில் சுத்தமான தண்ணீரை கலந்து அரைக்கப்படுகிறதா? என்றும் நமக்கு உறுதியாக தெரியாது..
இட்லி மாவு: அதேபோல, மாவு ஆட்டுகின்ற போது, கிரைண்டரை கழுவும்போது எந்த தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகிறது என்று தெரியாது.. சுத்தமான தண்ணீரை கொண்டு கல்லை கிளீன் செய்யாவிட்டால், ஈகோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படுமாம்.. இதனால், நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்கிறார்கள்.
வீட்டிலேயே மாவு அரைத்தாலும்கூட, 1 வாரத்துக்கு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், வயிறு வலி, செரிமான பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் வந்துவிடும்.. குடலிலுள்ள இயற்கையான நுண்ணுயிரிகளை வளர செய்யாமல், கெட்ட பாக்டீரியாவை வளர செய்துவிடும்.. எனவே, வீட்டிலேயே மாவு அரைத்தாலும், 2 நாட்களுக்கு மேல் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள்..
விவரங்கள்: தவிர்க்க முடியாத சூழலில், இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்க நேர்ந்தால், நம்பிக்கையான ஒரே கடையில் தொடர்ந்து வாங்க வேண்டும்.. அதேபோல, மாவு அரைத்து எத்தனை நாட்கள் ஆனது? என்ற விவரத்தையும் கவனித்து பயன்படுத்த வேண்டுமாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications