தோசைக்கு அரைக்கறீங்களா? நீங்க இட்லி மாவு பாக்கெட்டை கடையில் வாங்கறீங்களா? அப்ப இந்த டிப்ஸ் பாருங்க
சென்னை: இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்கறீங்களா? அப்ப இந்த விஷயத்தையும் நோட் பண்ணிக்குங்க.
இப்போது, இட்லி, தோசை நம்முடைய தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. எளிதில் ஜீரணமாக கூடிய சத்தான உணவாகவும் இட்லி கருதப்படுகிறது.. வீடுகளில் இன்றும் பலர் இட்லி, தோசை மாவு அரைத்து பயன்படுத்துகிறார்கள்.

எனினும் நிறைய பேர் வேலைக்கு செல்கிறார்கள்.. இவர்களால் தினந்தோறும் இட்லிக்கு மாவு அரைக்க முடிவதில்லை.. எனவே, பாக்கெட் இட்லி மாவு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..
பாக்கெட் மாவு: அதேபோல பேச்சுலர்களுக்கு எளிதில் கை கொடுப்பதும் இந்த இட்லி மாவு பாக்கெட்டுகள்தான். இதனால், பெண்களின் வேலைச்சுமை குறைகிறது... பேச்சுலர்களின் சாப்பாட்டு பிரச்சனையும் தீர்கிறது. அதைவிட முக்கியமாக, மாவு விற்பனை செய்பவர்களுக்கும் சிறந்த தொழிலாக கை கொடுக்கிறது.
ஆனால், கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள் நம்முடைய உடலுக்கு தீங்கு தரக்கூடியவை என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.. காரணம், இந்த மாவில் எளிதில், புளிப்பு வாசனை வராமல் இருப்பதற்காகவே, புண்களுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் (Boric Acid), ஆரோட் மாவு போன்றவற்றை சிலர் கலந்து விற்கிறார்களாம்.
ஆரோக்கியம்: அதேபோல, மாவு புளித்து போகாமல் இருப்பதற்காக, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது.. இவைகளை சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் தடைபடுகிறது.. வயிறு உபாதைகள், அஜீரணம் ஏற்படுகின்றன.. அதேபோல, உடலுக்கு பல நன்மைகளை தரும் வெந்தயத்தையும், அரிசியில் கலந்து பலரும் அரைப்பதில்லையாம்.
முக்கியமாக, நீண்ட நேரத்துக்கு கிரைண்டர்களில் மாவு அரைக்கும்போது, ஆட்டுக்கல் சிறிது சிறிதாக தேய்ந்து மாவில் கலக்கிறது.. இந்த கற்களை நாம் உண்ணும்போது, சிறுநீரகத்தில் கற்கள் வர நேரிடுகிறது. மேலும், இந்த மாவில் சுத்தமான தண்ணீரை கலந்து அரைக்கப்படுகிறதா? என்றும் நமக்கு உறுதியாக தெரியாது..
இட்லி மாவு: அதேபோல, மாவு ஆட்டுகின்ற போது, கிரைண்டரை கழுவும்போது எந்த தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகிறது என்று தெரியாது.. சுத்தமான தண்ணீரை கொண்டு கல்லை கிளீன் செய்யாவிட்டால், ஈகோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படுமாம்.. இதனால், நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்கிறார்கள்.
வீட்டிலேயே மாவு அரைத்தாலும்கூட, 1 வாரத்துக்கு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், வயிறு வலி, செரிமான பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் வந்துவிடும்.. குடலிலுள்ள இயற்கையான நுண்ணுயிரிகளை வளர செய்யாமல், கெட்ட பாக்டீரியாவை வளர செய்துவிடும்.. எனவே, வீட்டிலேயே மாவு அரைத்தாலும், 2 நாட்களுக்கு மேல் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள்..
விவரங்கள்: தவிர்க்க முடியாத சூழலில், இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்க நேர்ந்தால், நம்பிக்கையான ஒரே கடையில் தொடர்ந்து வாங்க வேண்டும்.. அதேபோல, மாவு அரைத்து எத்தனை நாட்கள் ஆனது? என்ற விவரத்தையும் கவனித்து பயன்படுத்த வேண்டுமாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications