பூனை மீசை செடி.. கிட்னி ஃபெயிலியர் வரவே வராது.. 1 கைப்பிடி மூலிகை போதும்.. உள்ளுறுப்புகள் பலம்பெறும்
சென்னை: சிறுநீரக கோளாறுகளை நம்மை நெருங்க விடாமல் தடுக்கும் முக்கியமான மூலிகைதான், பூனைமீசை மூலிகை. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதன் பலன்கள் என்னென்ன?
பூனை மீசை செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசையை போலவே இருக்குமாம்.. அதனால்தான் இந்த பெயரிலேயே இந்த செடியை அழைக்கிறார்கள்.. துளசி இலை போலவும் இருக்கும் என்பதால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் இதனை சொவார்கள்.

பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகை, தவிர்க்க முடியாத ஒன்று.. குறிப்பாக, சிறுநீரக கோளாறுகளை சரி செய்வதற்காக, இந்த மூலிகை பயன்படுத்துகிறார்களாம்.. அதிலும் ஆரம்பக்கட்ட சிறுநீரக புற்றுநோயையும் குணமாக்கும் இந்த பூனை மீசை மூலிகை சரி செய்துவிடுமாம்.
நம்முடைய உடலிலுள்ள தேவையில்லாத உப்புக்கள், கெட்ட நீரை இந்த பூனை மீசை வெளியேற்றுகிறது.. ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறதாம்.. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் குறைய துவங்கி, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.
மாதவிடாய் தொந்தரவு இருக்கும் பெண்கள், கடுமையான ஜூரத்தினால் பாதிக்கப்படுவோர் பித்தப்பையில் கற்களால் அவதிப்படுவோர் என யாராக இருந்தாலும், பூனை மீசை மூலிகை சரிசெய்யக்கூடியது. ரத்த கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனை போன்றவைகளை தீர்க்க, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பூனை மீசை மூலிகை சேர்க்கப்படுகிறது.
இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு தினமும் 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு, என அனைத்து சிறுநீரக கோளாறுகளும் சரியாகிவிடும்.. நீரிழிவு நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த இந்த மூலிகையே கை கொடுக்கிறது.
இந்த மூலிகையின் சாறு, தினமும் 2 வேளை குடித்து வரும்போது, சர்க்கரை நோய் குறையும்.. அல்லது ஒரு கைப்பிடி இலையை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, கஷாயம் போலவும் குடிக்கலாம்.. ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், இந்த மூலிகையில் டீ தயாரித்து குடிப்பார்களாம்.
ஆனால், வழக்கமாக டீ -தூளை போல, இந்த மூலிகையை சேர்த்து கொதிக்க வைக்க கூடாதாம். ஒன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்து விட்டு, அதற்கு பிறகு, 2 ஸ்பூன் இந்த மூலிகை பவுடரை போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால், தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். இந்த டீ, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. சிறுநீரை அதிகரிக்கக்கூடியது.
நீரிழிவு நோயாளிகள்: எனவே, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இவைகளை மருந்தாக அல்லது தேநீராக எடுத்து கொண்டால் பெரும்பலன் கிடைக்கும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications