பூனை மீசை செடி.. கிட்னி ஃபெயிலியர் வரவே வராது.. 1 கைப்பிடி மூலிகை போதும்.. உள்ளுறுப்புகள் பலம்பெறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரக கோளாறுகளை நம்மை நெருங்க விடாமல் தடுக்கும் முக்கியமான மூலிகைதான், பூனைமீசை மூலிகை. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதன் பலன்கள் என்னென்ன?

பூனை மீசை செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசையை போலவே இருக்குமாம்.. அதனால்தான் இந்த பெயரிலேயே இந்த செடியை அழைக்கிறார்கள்.. துளசி இலை போலவும் இருக்கும் என்பதால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் இதனை சொவார்கள்.

Poonai Meesai Cat Mustache Herb Kidney

பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகை, தவிர்க்க முடியாத ஒன்று.. குறிப்பாக, சிறுநீரக கோளாறுகளை சரி செய்வதற்காக, இந்த மூலிகை பயன்படுத்துகிறார்களாம்.. அதிலும் ஆரம்பக்கட்ட சிறுநீரக புற்றுநோயையும் குணமாக்கும் இந்த பூனை மீசை மூலிகை சரி செய்துவிடுமாம்.

நம்முடைய உடலிலுள்ள தேவையில்லாத உப்புக்கள், கெட்ட நீரை இந்த பூனை மீசை வெளியேற்றுகிறது.. ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறதாம்.. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் குறைய துவங்கி, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.

மாதவிடாய் தொந்தரவு இருக்கும் பெண்கள், கடுமையான ஜூரத்தினால் பாதிக்கப்படுவோர் பித்தப்பையில் கற்களால் அவதிப்படுவோர் என யாராக இருந்தாலும், பூனை மீசை மூலிகை சரிசெய்யக்கூடியது. ரத்த கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனை போன்றவைகளை தீர்க்க, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பூனை மீசை மூலிகை சேர்க்கப்படுகிறது.

இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு தினமும் 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு, என அனைத்து சிறுநீரக கோளாறுகளும் சரியாகிவிடும்.. நீரிழிவு நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த இந்த மூலிகையே கை கொடுக்கிறது.

இந்த மூலிகையின் சாறு, தினமும் 2 வேளை குடித்து வரும்போது, சர்க்கரை நோய் குறையும்.. அல்லது ஒரு கைப்பிடி இலையை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, கஷாயம் போலவும் குடிக்கலாம்.. ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், இந்த மூலிகையில் டீ தயாரித்து குடிப்பார்களாம்.

ஆனால், வழக்கமாக டீ -தூளை போல, இந்த மூலிகையை சேர்த்து கொதிக்க வைக்க கூடாதாம். ஒன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்து விட்டு, அதற்கு பிறகு, 2 ஸ்பூன் இந்த மூலிகை பவுடரை போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால், தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். இந்த டீ, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. சிறுநீரை அதிகரிக்கக்கூடியது.

நீரிழிவு நோயாளிகள்: எனவே, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இவைகளை மருந்தாக அல்லது தேநீராக எடுத்து கொண்டால் பெரும்பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+