பூனை மீசை செடி.. கிட்னி ஃபெயிலியர் வரவே வராது.. 1 கைப்பிடி மூலிகை போதும்.. உள்ளுறுப்புகள் பலம்பெறும்
சென்னை: சிறுநீரக கோளாறுகளை நம்மை நெருங்க விடாமல் தடுக்கும் முக்கியமான மூலிகைதான், பூனைமீசை மூலிகை. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதன் பலன்கள் என்னென்ன?
பூனை மீசை செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசையை போலவே இருக்குமாம்.. அதனால்தான் இந்த பெயரிலேயே இந்த செடியை அழைக்கிறார்கள்.. துளசி இலை போலவும் இருக்கும் என்பதால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் இதனை சொவார்கள்.

பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகை, தவிர்க்க முடியாத ஒன்று.. குறிப்பாக, சிறுநீரக கோளாறுகளை சரி செய்வதற்காக, இந்த மூலிகை பயன்படுத்துகிறார்களாம்.. அதிலும் ஆரம்பக்கட்ட சிறுநீரக புற்றுநோயையும் குணமாக்கும் இந்த பூனை மீசை மூலிகை சரி செய்துவிடுமாம்.
நம்முடைய உடலிலுள்ள தேவையில்லாத உப்புக்கள், கெட்ட நீரை இந்த பூனை மீசை வெளியேற்றுகிறது.. ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறதாம்.. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் குறைய துவங்கி, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.
மாதவிடாய் தொந்தரவு இருக்கும் பெண்கள், கடுமையான ஜூரத்தினால் பாதிக்கப்படுவோர் பித்தப்பையில் கற்களால் அவதிப்படுவோர் என யாராக இருந்தாலும், பூனை மீசை மூலிகை சரிசெய்யக்கூடியது. ரத்த கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனை போன்றவைகளை தீர்க்க, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பூனை மீசை மூலிகை சேர்க்கப்படுகிறது.
இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு தினமும் 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு, என அனைத்து சிறுநீரக கோளாறுகளும் சரியாகிவிடும்.. நீரிழிவு நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த இந்த மூலிகையே கை கொடுக்கிறது.
இந்த மூலிகையின் சாறு, தினமும் 2 வேளை குடித்து வரும்போது, சர்க்கரை நோய் குறையும்.. அல்லது ஒரு கைப்பிடி இலையை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, கஷாயம் போலவும் குடிக்கலாம்.. ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், இந்த மூலிகையில் டீ தயாரித்து குடிப்பார்களாம்.
ஆனால், வழக்கமாக டீ -தூளை போல, இந்த மூலிகையை சேர்த்து கொதிக்க வைக்க கூடாதாம். ஒன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்து விட்டு, அதற்கு பிறகு, 2 ஸ்பூன் இந்த மூலிகை பவுடரை போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால், தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். இந்த டீ, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. சிறுநீரை அதிகரிக்கக்கூடியது.
நீரிழிவு நோயாளிகள்: எனவே, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இவைகளை மருந்தாக அல்லது தேநீராக எடுத்து கொண்டால் பெரும்பலன் கிடைக்கும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications