கீரையில் பெஸ்ட் வல்லாரை.. ரத்தசோகையை விரட்டும் சூப்பர் பவுடர்.. இதுதான் முறை.. சருமம் மினுமினுக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வல்லாரை கீரைகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதே கிடையாது.. கண் பார்வையும் கூர்மையாகும். வல்லாரை பொடியை நாம் எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?

வல்லாரை கீரையில் சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் உள்ளன.. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் இந்த கீரைகள் உள்ளன. அனைத்து வகையான கீரைகளுமே இரும்புச்சத்து நிறைந்தவை என்றாலும், இந்த வல்லாரை கீரைகள், சற்று கூடுதலான இரும்பு சத்துக்களை கொண்டவை.

Do you know the Amazing Health Uses of Vallarai Powder and Vallarai Keerai is the Super Medicine for Skin Diseases

ரத்தசோகை: ரத்தசோகை பிரச்சனை இருந்தால், முருங்கைக்கீரையை போலவே சிறந்த தீர்வை தருவது இந்த வல்லாரை கீரையாகும்.. ரத்தத்தையும் சுத்திகரிக்க செய்கிறது..

அடிக்கடி வல்லாரை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படவே வாய்ப்பிருக்காதாம்.. யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கும், கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வல்லாரை கீரைதான் மருந்தாகின்றன..

மன அழுத்தம்: மனஅழுத்தத்தை விரட்டி புத்துணர்ச்சியை இந்த கீரை தருகிறது.. தோல் ஏற்படும் நமைச்சல், எரிச்சல், புண்களை விரட்டி, சருமத்தை பாதுகாத்து பளபளப்பை தரக்கூடியது. கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், பற்கள் சம்பந்தமான நோய்களை விரட்டி, ஈறுகளை பலப்படுத்துகிறது..

இந்த இலையை வெறுமனே மென்றுவிங்கினால், குடல் புண்களும், வாய்ப்புண்களும் ஆறிவிடும். வயிற்றிலிருக்கும் புழுக்களையும், குடலிலுள்ள கிருமிகளையும் வெளியேற்றுகிறது இந்த கீரைகள்.

காய்ச்சல் சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடியது இந்த வல்லாரை கீரைகள்தான். இந்த கீரையுடன் மிளகு, துளசி இலை சம அளவு எடுத்து, அரைத்து, மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொண்டால், காய்ச்சல் சமயங்களில் உதவும். மாதவிடாய் நேரங்களில் இந்த கீரையின் சாற்றுடன் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலிகள் உடனே நின்றுவிடும்.

வல்லாரை பொடி: கீரையாக இல்லாவிட்டாலும், பொடியாக கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பொடியை நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். 2 விதங்களில் இந்த பொடியை நாம் தயார் செய்யலாம். வல்லாரை கீரையை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக்கொண்டால், போதும்.

அல்லது, வல்லாரை இலையை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மண்சட்டியில், ஒரு டம்ளர் பசும்பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, இந்த வல்லாரையும் சேர்க்க வேண்டும். பிறகு, மண்சட்டியை ஒரு வெள்ளைத்துணியை மூடி இறுக்க கட்டி, பானையிலுள்ள கீரையை, மிதமான தீவியில் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

மண்சட்டி: சட்டியிலுள்ள பாலிலேயே வல்லாரைகள் வெந்துவிடும். பிறகு, துணியை நீக்கிவிட்டு, வெந்த இலைகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து, வெயிலில் ஒருநாள் காயவைத்தால் இலைகள் நன்றாக காய்ந்துவிடும். இதனை இடித்து பொடி செய்து, சலித்து எடுத்து காற்று புகாமல் வைத்து கொள்ளலாம். இந்த வல்லாரை பொடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இந்த பொடியில் பற்களை தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென்றிருப்பதுடன், ஈறுகள் பலமடையும்.. காய்ச்சல் வந்தாலும், இந்த பொடி மருந்தாகும்.. மலச்சிக்கல் என்றாலும், சிறிது அதிமதுரம் பவுடரையும் சேர்த்து வெந்நீரில் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ரத்தசோகை: வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் இருந்தால், இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். அல்லது சுடுசோறில் வல்லாரை பவுடர், உப்பு, நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். வல்லாரை பொடியை, ஏதாவது ஒரு பானத்துடன் கலந்து குடித்து வரும்போது, ரத்தசோகை நோயும் தீர்ந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+