வெற்றிலையின் சூப்பர் வெற்றி.. ஜஸ்ட் 4 வெத்தல போதும்.. மொத்த தொந்தரவும் ஓடிரும்.. வாவ் வெத்தல ரசம்
சென்னை: வெற்றி தரும் வெற்றிலை என்று சும்மாவா சொன்னார்கள்.. ஏகப்பட்ட ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிது இந்த வெற்றிலைகள். அதென்ன வெற்றிலை ரசம்??
மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரோட்டீனை கொண்டதுதான், இந்த வெற்றிலை.. தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் நிரம்பியிருக்கின்றன.

உடலுக்கு வெப்பத்தையும், எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுக்கக்கூடியது என்பதால், வளரும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு தரலாம். இதனால், அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்...
தாய்ப்பால்: மிகச்சிறந்த தாய்ப்பால் சுரப்பியாக திகழ்கின்றன.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு பிரச்னைக்கு தீர்வாகிறது. .
வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்... இதை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாட்டையும் நீக்கிவிடலாம். இந்த வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்கிறதாம்.
உடல் எடை: நார்ச்சத்து அதிகமுள்ள வெற்றிலையில், மிளகு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை குறைய துவங்குமாம்.. காரணம், மிளகிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பெப்பரின் போன்றவை சேர்வதால், உடலிலுள்ள கொழுப்பை உடைக்க எளிதாக உதவுகின்றன..

மேலும், மிளகில் உள்ள பெப்பரைன் செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது.. வெற்றிலை + மிளகு சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வாய்நாற்றம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்..
சுவாச கோளாறு: இத்தனை பலன்களை தந்தாலும், நுரையீரலின் நண்பனாக வெற்றிலை திகழ்கிறது.. வெற்றிலையில் உள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப்பிழிந்து, அந்த சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது..
அளவுக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்தால், வெற்றிலையில் ரசம் வைத்து குடிக்கலாம்.. இதற்கு, மிளகு, சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக இடித்து கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி இடித்துக் கொள்ள வேண்டும். சிறிது புளியை கரைத்து, அதில், தக்காளி, உப்பு சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்,.
ரசம் ரெடி: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், அரைத்த மிளகு சீரகம், இஞ்சி பூண்டு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது, புளிக்கரைசலுடன், சிறு சிறு துண்டுகளாக்கிய வெற்றிலைகளையும், அதனுடன் கொத்தமல்லி இலையையும் சேர்க்க வேண்டும்.
நுரை வரும்நேரத்தில், அடுப்பை அணைத்துவிட்டால், வெற்றிலை ரசம் ரெடி. சளி, இருமல், காய்ச்சல், தலைசுற்றல், தொண்டை வலி, தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த வெற்றிலை ரசம் நிவாரணத்தை தரும்.












Click it and Unblock the Notifications