Beer: ஆல்கஹால் சதவீதம் குறைவுதான்! ஆனாலும் அடிக்கடி பீர் குடிக்கக் கூடாதாம்!
சென்னை: அடிக்கடி பீர் அருந்துகிறீர்களா? அவ்வாறு அடிக்கடி பீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தெரிந்து கொள்ளலாம். பெண்கள் பீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மது அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கு என எச்சரிக்கப்பட்டாலும், அதன் விற்பனை குறையவில்லை. இளைஞர்கள் வார இறுதி நாட்களில் பீர் அருந்தி மகிழ்வது வழக்கமாகிவிட்டது. எனினும், பீர் அதிகமாகக் குடிப்பது நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆல்கஹால் சதவீதம் குறைவாக இருந்தாலும், அதை அதிகமாகச் குடிப்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.பீர் அருந்துவது மகிழ்ச்சி தருவதாகப் பலர் கருதினாலும், அதில் உள்ள ஆல்கஹால் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். இது வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர வழிவகுத்து, எலும்புகளையும் பலவீனப்படுத்தும். குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பெண்கள் பீர் அருந்தும்போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படக்கூடும். ஆண்களுக்கு மார்பக அளவு பெரிதாதல் (Gynecomastia) போன்ற பாதிப்புகள் நிகழலாம். பீர் அதிகம் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்து, உடல் வறட்சி அடையும். இதன் விளைவாகத் தலைச்சுற்றல், தலைவலி, சோர்வு போன்ற குறைபாடுகள் தோன்றும்.
பீரில் உள்ள ஆல்கஹால் குடல் சவ்வுகளை எரிச்சலடையச் செய்யும். அதிகப்படியான பீர் கல்லீரலில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். நீண்ட காலப் பயன்பாடு சிரோசிஸ், கொழுப்பு கல்லீரல், ஆல்கஹால் ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். காலப்போக்கில், மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படலாம்.
அத்துடன், பீர் அதிகமாகக் குடிப்பதால் இதய ஆரோக்கியம் பழுதாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பீர் அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுபானங்களை முற்றிலும் கைவிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
பீர் பழக்கத்தை உடனடியாக விட முடியாதவர்கள் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முயல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆறு மாதங்கள் மதுபானங்களைத் தவிர்ப்பது உடல், மன ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். பீர் கைவிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மதுவுக்கு அடிமையானவர்கள் தூக்கமின்மை சிக்கல்களால் பாதிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் போதையில் உறங்கினாலும், பின்னர் தூக்கம் தடைபடும். இதனால் முறையான ஓய்வு கிடைக்காமல் சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். பீரில் கலோரிகள் மிகுதியாக இருப்பதால் விரைவாக உடல் எடை கூடி, உடல் பருமன் உருவாகும். உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications