ஆட்டிறைச்சி உறுப்பு.. தலைக்கறி முதல் நெஞ்செலும்பு வரை.. மட்டன் எடுத்தால் இதையும் சாப்பிடுங்க.. வாவ்
சென்னை: ஆட்டுக்கறி என்றாலே சதைப்பகுதியான மட்டன் என்றாகிவிட்டது.. உண்மையை சொல்லப்போனால் சதையைவிட, ஆட்டின் பாகங்களே உடலுக்கு நன்மையை தருகிறதாம். அவை என்னென்ன?
ஆட்டுக்கறியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. முக்கியமாக வைட்டமின் B12 சத்துக்கள், நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்ற துணைபுரிகிறது.

சரும பளபளப்பு: ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
மட்டனில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்தவகையில், மட்டன் மட்டுமல்லாமல் மட்டனின் பாகங்களும் உடலுக்கு எத்தகைய நன்மையை தருகின்றன என்பதை பார்ப்போம்.
தலைக்கறி: ஆட்டின் தலையை தலைக்கறி என்கிறோம்.. இந்த தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலிகள் நீங்கும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு பிரதான இடமுண்டு. பிரசவமான பெண்களுக்கு தலைக்கறி குழம்புகளை இன்னமும் வீடுகளில் வைத்து தருகிறார்கள்.. காரணம், தலைக்கறி சாப்பிட்டால், பச்சிளம் குழந்தைக்கு தலைக்கு உறுதியை தந்து தலை நிற்கும் என்பார்கள்.
அந்தவகையில், குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி என்பது மிகவும் முக்கியமான உணவாகும்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. தலைக்கறியிலேயே ஆட்டின் கண்களும் வந்துவிடும்.. இதனையும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டால், நம்முடைய கண்கள் கூர்மையான பார்வையை பெறும்.
ஆட்டு கால்கள்: ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆட்டின் நெஞ்சு கறியை எடுத்து கொண்டால், நம்முடைய நெஞ்சிலுள்ள கபம், சளி நீங்கும். மார்புக்கு பலத்தையும், சக்தியையும் தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்களை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.. இந்த கறியில் வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டின் கண்களையும் குழம்பில் சேர்த்து சாப்பிடும்போது, நமது கண்களின் பார்வையும் கூர்மையாகிறது.
கொழுப்புகள்: ஆட்டின் நுரையீரல், மற்றும் கொழுப்புகளும் நமக்கு நன்மையையே தருகின்றன.. இதனால், நம்முடைய உடலிலுள்ள வெப்பம் குறைகிறது.. நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கும் சிறந்த வலிமையை தருகிறது. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆட்டின் குடல் கறியை, "போட்டி" என்றும் சொல்வார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம். ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களும் பலம் பெறும்..
ஆட்டுக்கறி: இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
குறிப்பாக, சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல்எடை அதிகமாக உள்ளவர்கள், மட்டனை தவிர்த்துவிடலாம்.. உடல் ஆரோக்கியமும், உடலுழைப்பும் மிக்கவர்கள் குறைந்த அளவு சாப்பிடலாம்..!!
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications