நரை முடியை கருப்பாக்கும் நெல்லிக்காய் + தேங்காய் எண்ணெய்! 7 நாளில் முடி கொட்டுதலுக்கு ஃபுல்ஸ்டாப்!
சென்னை: நரை முடியை கருப்பாக்கும் நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்று பள்ளி மாணவர்களுக்குக் கூட நரைமுடி, முடி உதிர்தல் பிரச்சினை நிலவுகிறது.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் உங்கள் உலகம், உங்கள் செய்திகள் எனும் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெள்ளை முடியை கருப்பாக்க என்ன செய்வது என நம்மில் பலரும் கூகுளில் அதிகம் தேடுவது உண்டு. ஆனால் கஷ்டமே இல்லாமல், ஆரோக்கியமான முறையில் முடியை கருப்பாக, அடர்த்தியாக வளர்ச்சி செய்ய வழி உள்ளது.

அதுவும் ஏழே நாட்களில் ரிசல்ட் தெரிய 2 பொருட்களை மட்டும் சரியாக பயன்படுத்தினால் போதும். முடி கொட்டுதல், உதிர்தல், நரைத்தல், மற்றும் உலர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இயற்கை முறையில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க, நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான தீர்வை தரும். இந்த இரண்டு பொருட்களை மட்டும் சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் உங்களின் நரை முடியை கருப்பாக்கி, அடர்த்தியாக வளர வைக்க முடியும்.
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள்
4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை கொதிக்காமல் வெதுவெதுப்பாக சூடாக்கவும். இதில் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
5-10 நிமிடங்கள் மிதமான தீயில் வெதுவெதுப்பாக இருக்கட்டும். பிறகு குளிர்ந்ததும், முடி வேர்களில் மெதுவாக மசாஜ் செய்து பூசவும்.
குறைந்தது 1 மணி நேரம் வைத்து பிறகு மிதமான ஷாம்பூ கொண்டு அலசவும்.
7 நாட்களில் முடி வளர்ச்சி மற்றும் கருமை அதிகரிக்க
முடியை வாரம் இருமுறை இந்த எண்ணெய் கலவையை வைத்து மசாஜ் செய்யவும்.
தினமும் ஆரோக்கியமான உணவுகள் - பச்சை காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்கவும் - முடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். தலைக்கு குளிர்ச்சியான எண்ணெய்கள் தேய்க்கவும் - பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
முடியை அதிகமாக ஹீட் (Heat) கொடுக்காமல் பாதுகாக்கவும் - ஸ்டிரெய்ட்னிங், ஹேர் ட்ரையர் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கடுமையான ரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகளை விட, இயற்கையான முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இது சமூகவலைதளத்தில் வெளியான பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த விரும்புவோர் மருத்துவரை கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications