கானா வாழை இலையின் அவசியம்.. மூலம், தொற்றுக்களை விரட்டும்.. தாம்பத்யம் சிறக்க உதவும் கானா வாழைக்கீரை
சென்னை: சிறுநீரக பைகள், கல்லீரல் , மண்ணீரல், நுரையீரல் என முக்கிய உறுப்புகளுக்கு வலிமையை தருவதுடன், அவற்றின் கோளாறுகளையும் சரிசெய்யக்கூடிய கானா வாழையை பற்றி தெரியுமா? பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நோய்க்கு, இந்த கானா வாழை கீரை எப்படி மருந்தாகிறது தெரியுமா? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புரதம், மாவுச்சத்து, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் கொண்ட கானா வாழை இலைகள் குளிர்ச்சி நிறைந்தது.. உஷ்ண கோளாறுகளுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.

மூல நோய் பறந்துவிடும்
இந்த கானா வாழை கீரையை நன்றாக சுத்தம் செய்து, நீரில் கொதிக்க வைத்து, மிளகு கலந்து குடித்துவரும்போது, எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் தணியும்.. அதேபோல, இந்த குளிர்ச்சி நிறைந்த இலைகள், அல்சரை ஆற்றக்கூடியது.. மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு கானா வாழை சிறந்த மருந்தாகும்.. இந்த இலைகளுடன் துத்தி இலைகளையும் சேர்த்து குடித்தால், இரத்த மூலம் மெல்ல குணமடைய துவங்கும்.
இரத்தத்தை சுத்தம் செய்யக்வடியது கானா வாழை கீரை.. உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு பலத்தை தரக்கூடியது.. அத்துடன், சிறுநீர்ப்பாதை, நுரையீரல் பாதைகளில் உள்ள தொற்றுக்களையும், அழுக்குகளையும் அழிக்கக்கூடியது..
ஆண்களுக்கு நிவாரணம்
ஆண்களுக்கு நரம்புகள் பலமற்று இருந்தால் அதற்கும் இந்த இலையே உதவுகிறது.. ஒரு கிளாஸ் நீரில் கானா வாழை இலையுடன் தூதுவளை பூ , மற்றும் முருங்கைப்பூவினையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து 40 நாட்கள் குடித்து வரும்போது, தாது விருத்தி பெருகும் என்பார்கள். அல்லது இதன் சாற்றில் ஜாதிக்காயை ஊற வைத்து காயவைத்து தூள் செய்து,. தினசரி 3 கிராம் சாப்பிட்டு வந்தாலும் ஆண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
கானா வாழையின் இலையுடன் சிறிது கொட்டைப்பாக்கு வைத்து அரைத்து சாப்பிட்டு வருவதால் தாம்பத்யம் சிறக்கும் என்பார்கள்.. அல்லது, இந்த கீரையை, முருங்கைப்பூ, துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து, நெய் கலந்து, 21 நாட்கள் சுடுசோறுடன் பிசைநது சாப்பிடுவதாலும் தாம்பத்யம் செழிக்கும்.
புற்றுநோய் நெறிக்கட்டி நோய்
கானா வாழை இலையுடன் சம அளவுக்கு கீழா நெல்லியை விழுதாக அரைத்து, புதிய தயிரில் கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால், பெண்களை பாதிக்கக்வடிய வெள்ளைப் போக்கு பாதிப்பு குறையும்..
அவ்வளவு ஏன், கானா வாழையை உணவில் சேர்த்து வரும்போது, புற்றுநோய் நெறிக்கட்டி நோயும் தடுக்கப்பட்டுவிடுமாம். புண்கள், காயங்களுக்கும் இந்த கீரையை மஞ்சளுடன் அரைத்து பற்று போல போடலாம். பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி, வீககம் இருந்தாலும், இப்படி பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். அதேபோல, பெண்கள் மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருந்தாலும், இந்த கீரையை சமையலில் சேர்த்து கொள்ளலாம்.
முறையான ஆலோசனை முக்கியம்
இந்த கானா வாழை இலையை கசக்கி சாறு எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மேல் பூசி வந்தால், பருக்கள் உடைந்து காயம் ஆறிவிடும்.. கானா வாழை இலைச்சாற்றை, நீருடன் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.. பற்கள், ஈறுகளுக்கும் பலம் கிடைக்கும். இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே ஆரோக்கியமாகும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications