ஒரே விதை போதும்.. உடல் எடை விறுவிறுனு குறையும்.. இந்த மேஜிக் இலையை இப்படி பயன்படுத்துங்க.. சூப்பர்
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், சப்ஜா விதைகள்..
சப்ஜா விதைகளை, ஃபலூடா விதைகள் என்று அழைப்பார்கள்.. செடி துளசி இனத்துடன் சேர்ந்தது என்பதால், இதனை திருநீற்றுப்பச்சை என்றும் சொல்வார்கள். காரணம், இந்த செடியிலிருந்துதான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன.

அதனால்தான், சிலர் சப்ஜா விதையும், துளசி விதையும் ஒன்று என்பார்கள்.. ஆனால், சியா விதைகளை சப்ஜா விதைகள் சற்று பெரியதாக இருக்கும்.. சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு டபுள் மடங்கு உள்ளது.. ஆனால், துளசி விதைகளை விட நார்ச்சத்து குறைவாக இருக்கும்.
கொழுப்பு: மிகவும் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது சப்ஜா விதைகள்.. நார்ச்சத்து நிறைந்தது.. இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அடங்கியது.. ஒமேகா-3 கொழுப்பு கலந்திருக்கிறது.. மொத்தத்தில், அபரிமிதமான ஊட்டச்சத்தினை அடக்கி வைத்திருப்பதுதான், இந்த சப்ஜா விதைகள். நார்ச்சத்து நிறைந்த பொருள் என்பதால், நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற நீரையேற்றுகிறது.
சப்ஜா விதைகள் எப்போதுமே தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்... உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த விதைகள் மிகவும் நன்மைதரக்கூடியது.. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், எடை இழப்புக்கு மிகச்சிறந்த உணவாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன் பசியையும் கட்டுப்படுத்தக்கூடியது..
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், சர்க்கரை அளவு குறையும்.. அதேபோல, தினமும் ஒரு ஸ்பூன் நீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும், உடல் எடை மெல்ல குறைய தொடங்கும்.
இந்த விதைகள் பித்தத்தை நீக்கக்கூடியது.. மலச்சிக்கல் உள்ளவர்களும், இந்த சப்ஜா விதையை பாலில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.. குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.. ரத்தப்போக்கு பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கும், வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் இந்த விதைகள் தீர்வாகின்றன. புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் பிரச்சனைகளை தடுக்க இந்த விதைகள் தூண்டுகோலாகின்றன..
சப்ஜா விதைகள்: சப்ஜா விதை மட்டுமல்ல, சப்ஜா இலையும்கூட மருத்துவ குணம் வாய்ந்தது.. இந்த இலையை சாப்பிட்டால் தலைபாரம், மூக்கடைப்பு நீங்கும்.. அல்லது இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்தாலும், சளி, ஜூரம், தலைவலி போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும். இந்த இலையை அரைத்து சருமத்தில் பூசினால், சரும பிரச்சனைகள் நீங்கும். சருமத்துக்கு ஆரோக்கியமும் கூட... அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி அதிகமாகி, காதுவலி ஏற்பட்டாலும்கூட இந்த சாற்றினை பயன்படுத்தலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications