Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடல்வால் தொற்று.. எள்ளுடன் நெய் சேர்த்து சாப்பிடலாமா? நிறைய எள் விதைகள் கேன்சருக்கு வழிவகுக்குமாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எள் விதைகள் உடலுக்கு நல்லதா? எள்ளை வெல்லத்துடன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? எள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுமா? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

எள் விதைகளை பொறுத்தவரை, உடல் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. படபடப்பு தன்மையை குறைத்து, மனதை சாந்தப்படுத்தக் கூடியவை.. சிறுநீர் தாராளமாக பிரிய எள் விதைகள் உதவுகின்றன.. இதனால், சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுவதுடன், சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலும் தணியக்கூடும்.

sesame sesame seeds appendicitis

வயிற்று கழிவுகள்: வயிற்று கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை பெருக்க செய்யக்கூடியது எள் விதைகள்.. மூலநோய் உபாதை இருந்தால், எள்ளு விதையை லேசாக வறுத்து தூள் செய்து, நெய்யுடன் கலந்து சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். எள் இலைகளுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், ரத்த மூலநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.

அதேபோல 1 ஸ்பூன் வறுத்த எள்ளுடன், 1 ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடும்போது, இதயத்துக்கு நல்லது.. காரணம், ஏனென்றால், எள் மற்றும் வெல்லம் இரண்டிலுமே நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதயத்துக்கு வரக்கூடிய ஆபத்துகள் நெருங்குவதில்லை.

செரிமான பிரச்சனைகள்: எனினும், எள் விதைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.. அழற்சி பிரச்சனையை சிலருக்கு ஏற்படுத்திவிடும்.. மேலும் இதிலுள்ள எண்ணெய் செரிமான பிரச்சனைகளை உண்டுபண்ணிவிடுவதுடன் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுமாம்.

அதேபோல, எள் விதைகளை அதிகமாக சாப்பிட்டால், குடலுறுப்பில் அழற்சியை ஏற்படுத்தி குடலின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.. இதன்காரணமாக, குடலின் உட்சுவற்றில் சிறு சிறு பைகள் போல உருவாகி, கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

குடல்வால் தொற்று: சிலசமயம், குடல்வாலில் தொற்று ஏற்படலாம்.. சிலசமயம் குடல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது.. ஆய்வு ஒன்றின் படி, ஒருவர் தினமும் 15 நேனோகிராமிற்கும் அதிகமான அளவில் எள்ளு விதைகளை சாப்பிட்டால், அது குடலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எள்ளு விதைகளின் அபாயகரமான பக்க விளைவு என்றால், அது இந்த குடல் புற்றுநோய்தான். இது மரணம்வரை கொண்டுபோய் விட்டுவிடலாம்.

அதேபோல, மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.. அதாவது, மார்பக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியவை.. அத்துடன், எள் விதைகளிலுள்ள கொழுப்புகள் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

கர்ப்ப காலம்: அதேபோல, மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாமே தவிர, அதிகமாக யார் சாப்பிட்டாலும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடுமாம். அதைவிட முக்கியமாக, கர்ப்ப காலத்தில் எள் விதைகளை சாப்பிடுவது சரியானதல்ல எனறு அறிவுறுத்துகிறார்கள். அதிகமாக எள் சாப்பிட்டால் கருச்சிதைவும் ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் கர்ப்பம் தரித்து அடுத்த 4 மாதங்களுக்காவது எள் விதைகளை சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.

எள்ளு விதைகள் சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.. ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலோ, அவர்களுக்கு சரும அரிப்புக்கள் ஏற்படும் அபாயம் அதிகமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+