சாப்பாட்டு பிரியரா நீங்க.. ஓவரா சாப்பிட்டாலும் சிக்கல் தானாம்.. பாதிப்புகள் என்ன? தவிர்ப்பது எப்படி
சென்னை: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று என ஒரு பழமொழி நமது ஊரில் சொல்வதுண்டு. உயிர் வாழ உணவு அடிப்படை தேவை என்றாலும் அதையும் அளவோடு சாப்பிடுவதுதான் உடல் நலனுக்கு நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் அதை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை அளவுக்கதிமாக சாப்பிடுவது என்று சொல்லப்படும். நம்மில் கூட எத்தனையோ பேர் வயிறு முட்ட சாப்பிடுவதை பார்த்து இருக்கலாம். வழக்கமாக குறைவாக சாப்பிட்டு வந்தாலும் கூட பிடித்தமான உணவு கிடைத்தால் நெஞ்சு வரை உணவு நிற்குதப்பா... என்று சொல்லும் அளவுக்கு ஒரு வெட்டு வெட்டி விடுவார்கள்.
இன்னும் சிலரோ எந்த சாப்பாடாக இருந்தாலும் ஒரு பிடி பிடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அது ஒவ்வொருவருவடைய உணவு பழக்க வழக்கத்தை சார்ந்தது. இருந்தாலும், தேவைக்கு அதிகமான அளவு நாம் சாப்பிடும் போது சில உடல் உபாதைகளும் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியாக சாப்பிடுவது என்பது பொதுவாக குறைந்த நேரத்திற்குள் மிதமிஞ்சி சாப்பிடுவதைத்தான் குறிக்கிறது.

ருசித்து சாப்பிட வேண்டும்: இப்படி அதிகப்படியாக சாப்பிடுவதால் உடல் பருமன், டைப் 2 டையபட்டீஸ், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதிகப்படியாக சாப்பிடும் போது அதிகப்படியான கலோரிகளை உடல் கொழுப்புகளாக சேமித்து வைக்கிறது. இதனால், உடை எடை கூடுதல், உடல் பருமன் ஆகியவை ஏற்படும். அதிகப்படியாக சாப்பிடுவது வயிற்று வலி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
வெறும் உடல் ரீதியிலான பாதிப்புகள் மட்டும் இன்றி உளவியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமாம். அதாவது மன அழுத்தம், கவலை ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்படி அதிகப்படியாக சாப்பிடுவதால் ஏற்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதலில் நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம் என்பதை கட்டும் அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். எனவே அதிகப்படியாக சாப்பிடுவதை உணர்த்தும் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
* சாப்பிடும் போது உண்ணும் உணவு மீது கவனம் செலுத்த வேண்டும். அதாவது, உணவையும் அதன் சுவையையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது கவனம் சிதறாமல் உணவின் மீது கவனம் இருப்பது சிறந்த உணவை தேர்வு செய்து சாப்பிடுவதையும் அதிகப்படியாக சாப்பிடுவதை குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மதிய உணவு அவசியம்: * மதிய உணவை சாப்பிடுவதை தவிர்க்கக் கூடாது. ஏனெனில் மதிய உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது பசியின்மைக்கு வழி வகுக்கும். எனவே மதிய உணவை தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
* வேகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வேகமாக சாப்பிட்டால் போதிய அளவு சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வை கொடுக்க நேரம் எடுக்கும் . எனவே, நிதானமாக நன்கு மென்று சாப்பிட்டால் போதிய அளவு சாப்பிட்டதும் வயிறு மூளைக்கு தகவல் கொடுத்து விடும்.
* சாப்பிடும் போது பெரிய அளவிலான பிளேட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆய்வு சொல்கிறது. சிறிய அளவிலான பிளேட்டுகளில் சாப்பிடும் போது தட்டு நிறைய உணவு பொருள் இருக்கும் என்பதால் நமக்கு அதிகமாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
* பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் (நட்ஸ்) உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் அதிகப்படியாக நாம் உணவு உண்பதை தவிர்ப்பதற்கு உதவும்.
* டிவி பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாதாம். ஏனனில், நமது கவனம் சாப்பாடு மீது இல்லாமல் செல்போன்கள் மீது இருந்தால் எவ்வளவு சப்பிடுகிறோம் என்ற அளவு தெரியாமல் அதிகம் சாப்பிட்டு விடுவோம்.
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனனில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் பசியை கட்டுப்படுத்தி வைப்பதோடு, நாள் முழுவதும் உடல் சீராக இயங்க உதவிகரமாக இருக்கும்.
-
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்?












Click it and Unblock the Notifications